அவிநாசி, ஜூலை 9- ஏடி காலனி குடியிருப்பில் உள்ள வீடுகளின் மேல், மின்சார கம்பி செல் வதால் வீட்டை பராமரிப்பு செய் யவே முடியாமல் அப்பகுதி மக் கள் தவித்து வருகின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. அவிநாசி ஒன்றியம், ராமநாதபு ரம் ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டக ளாம்புதூர் பகுதியில் 100க்கும் மேற் பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின் றனர். இப்பகுதியில் அமைக்கப்பட் டுள்ள சாக்கடை கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி உள்ளது. அதே போல 5 ஆண்டுகளுக்கு மேலாக சுத் தம் செய்யப்படாமல் மூன்று மேல் நிலைத் தொட்டிகள் உள்ளது. அட் சயா கார்டன் பகுதியில் சாக்கடை மற் றும் சாலை வசதி இல்லாமல் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு தீர்வு காண வேண்டும். இப்ப குதியில் குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதேபோல் தொட்டகளாம்புதூர் ஏடி காலனி குடி யிருப்பு பகுதியில் சாக்கடை கால் வாய் அமைத்து தரவேண்டும். மழை காலங்களில் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் சூழ்ந்து விடுகிறது. இதற்கு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும். பொது மக்கள் பயன்படுத்தும் பொதுக் குழாய் உடைந்து நான்கு மாதங் கள் மேல் கடந்துவிட்டது. இதனை சீர மைத்து தர வேண்டும். கிராம பகுதி யில் முழுவதும் நிழவும் குடிநீர் தட்டுப் பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவில் பொதுமக்களி டம் கையொப்பம் பெற்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ் குமார், விஜயகுமார் உள்ளிட்டவர்க ளிடம் சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்க செயலாளர் ஏ.சரவணகுமார் தலைமையில் மனு அளித்தனர். அதேபோல் தொட்டகளாம்புதூர் ஏடி காலனி குடியிருப்பில் உள்ள வீட களின் மேல், மின்சார கம்பி செல்வ தால் வீட்டை பராமரிப்பு செய்யவோ, வீடு கட்ட முடியாமல் தவித்து வருகின் றனர். இதுகுறித்து கருவலூர் மின் வாரிய அலுவலகத்தில் மின் வாரிய அதிகாரியிடம் சிஐடியு நிர்வாகி எம். பண்ணாரி கோரிக்கை மனு அளித் தார். இம்மனுவை பெற்ற அதிகாரி கள் எங்கள் வழிகாட்டுதல் படி பணம் கட்டினால் மட்டுமே வேறு இடத்தில் மாற்றம் செய்து தர முடியும் என தெரிவித்தனர். இதற்கு அப்பகுதி யைச் சேர்ந்த பொதுமக்கள் தினசரி கூலி தொழிலாளர்கள் நாங்கள் பெரு மளவு செலவு செய்ய முடியாது என தெரிவித்தனர். இம்மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் தங் கள் கோரிக்கையை மேலதிகாரிக ளுக்கு மாற்றம் செய்வதாக தெரி வித்தார். இதே கோரிக்கையை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தெரிவித்த போது. வட்டார வளர்ச்சி அலுவலர் இதற்கு எங்களால் நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது. மின்சார வாரிய அலுவலகத்தை நாடவும் என தெரி வித்தனர். இதனால் அப்பகுதி மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் தீர்வு ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுத்துள்ள னர். இந்நிகழ்வில், கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, முன் னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முரு கன், கிளைச் செயலாளர் அருண் உட்பட பலர் கலந்து கொண்டனர்.