கோவை, ஆக.17- மகளிர் உரிமைத் தொகைக்கு மனுக்களை விண்ணப்பியுங்கள் என்று வந்த தவறான குறுஞ்செய்தியை நம்பி வந்த பெண்களால் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பரபரப்பான சூழல் நிலவியது. மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான மனுக்களை உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் நடைபெறும் சிறப்பு முகாம் களில் கொடுக்க வேண்டும் எனவும் இந்த முகாம் சனி, திங்கள் மற்றும் செவ் வாய்க்கிழமை ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே நடைபெறும் எனவும் தமிழகம் முழுவதும் வாட்ஸ் அப்பில் வதந்தி பரவி யுள்ளது. இதனை நம்பி அந்தந்த ஊர் களில் உள்ள பெண்கள் பலரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்து வரு கின்றனர். இதேபோல், கோவை, தரும புரி, சேலம் மாவட்டங்களிலும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள் இந்த குறுஞ்செய்தியை நம்பி ஆட்சியர் அலு வலகத்திற்கு வந்தனர். அவர்களிடம் காவல்துறையினர் இது வெறும் வதந்தி என விளக்கமளித்து திருப்பி அனுப்பி வைத்தனர்.
தவறான தகவலை பரப்பினால் நடவடிக்கை
சமூக ஊடகங்களில் எவ்வித முகாந்திரமுமின்றி, மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாகவும், மனுக்களை வழங்கினால் அனைவருக்கும் உடனே உரிமைத்தொகை கிடைக் கும் என தவறான தகவல் பகிரப்பட்டு வருகிறது. இதுபோன்ற தவறான தக வல்களை சமூக ஊடகங்களில் பரப்புவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப் படும் சேலம் ஆட்சியர் ரா.பிருந்தாதேவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.