districts

பெரியார் குறித்த நூல்கள் வெளியிட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதா? தமுஎகச கண்டனம்

சேலம், டிச.17- பெரியார் குறித்த நூல்கள் வெளியிட்ட பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் மீது நடவடிக்கை எடுத்து வரும் முயற்சிக்கு தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழக இதழி யல் துறை இணைப் பேராசிரியர் ரா.சுப்பிர மணி, ‘பெரியாரின் போர்க்களங்கள்’, ‘மெக் காலே பழமைவாதக் கல்வியின் பகைவன்’ ஆகிய நூல்களை, சேலம் புத்தகத் திருவிழா வில் வெளியிட்டார். இதற்காக அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதாக செய்திகள் வெளியாகின. இதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர், கலைஞர்கள் சங்கத்தின் சேலம் மாவட்டச் செயலாளர் கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ரகுபதி, அழகப்பன், கல் யாணசுந்தரம் ஆகியோர் பல்கலைக்கழக துணைவேந்தரை சந்தித்து மனு அளித்து, பல்கலைக்கழக நிர்வாகத்தின் இந்த செயல் முறையற்றது என்று எடுத்துரைத்தனர். அப்போது, நிர்வாகத்திடம் அனுமதி பெறா மல் பேராசிரியரின் இந்த செயலானது பல்க லைக்கழக சட்ட விதிமீறலாக கருதி நடவ டிக்கை மேற்கொள்வதாக துணைவேந்தர் கூறினார். மேலும், பல்கலைக்கழக சிண்டி கேட் உறுப்பினராக உயர் பதவியில் ரா.சுப்பிர மணி நியமிக்கப்பட்ட பின்னணியில், அவரின் இச்செயல் குறித்த புகார் அடிப்படையில் நட வடிக்கை எடுப்பது குறித்த விவாதம் நடை பெறுவதாகக் கூறினார். இதழியல்துறை பேராசிரியராக இருப்ப வர் நூல் வெளியிட்டுள்ள செயல் எந்த வகை யிலும் தவறான செயலாக கருத முடியாது.  எனவே, பல்கலைக்கழக நிர்வாகத்தின் மேல் நடவடிக்கையை கைவிட வேண்டுமென தமு எகச தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது. அப் போது துணைவேந்தர் பேசுகையில், பெரி யார் மற்றும் மெக்காலே குறித்த நூல் வெளி யிட்டதற்காக நிர்வாகம் நடவடிக்கை எடுப்ப தாக ஊடகங்கள் தவறான செய்தியை பரப்பு வதாகவும், நிர்வாகம் சட்டப்பூர்வ நடவடிக் கையை தான் மேற்கொள்கிறது, என்றும் கூறி னார்.