districts

img

ரூ.1 கோடி இழப்பு ஏற்படுத்திய முன்னாள் ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவு

திருப்பூர், ஜன.30- திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம்,  பழையகோட்டை ஊராட்சி மன்றத் தலைவர்  மீனாட்சியின் மகனும், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான ராசு என்கிற சண்முக  சேகரன் முறைகேடாக செயல்பட்டு அரசுக்கு  சுமார் ரூ.1 கோடி இழப்பு ஏற்படுத்தி இருப்ப தால், அவர் மீது சட்ட நடவடிக்கை மேற் கொண்டு அரசுக்கு ஏற்பட்ட இழப்புத் தொகையை வசூலிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இது பற்றிய விபரம் வருமாறு: திருப்பூர்  பழையகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பி. மூர்த்தி (38). இவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல்  செய்திருந்தார். அதில் அவர் தற்போதைய பழையகோட்டை ஊராட்சிமன்றத் தலை வரின் மகனும், முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவருமான ராசு என்கிற சண்முக சேகரன்  மீது புகார் கூறி நடவடிக்கை எடுக்க கோரியி ருந்தார்.  பழைய கோட்டை ஊராட்சி காங்கேயம்,  ஈரோடு மற்றும் திருப்பூர் உள்ளிட்ட தொழில்  மையங்களுக்கு அருகில் அமைந்துள்ளது. இதனால் அங்கு நில மதிப்பு அதிகமாக உள் ளது. ரியல் எஸ்டேட் விற்பனையும் அதிகளவு  நடைபெறுகிறது. கடந்த 2011 - 2016 கால கட்டத் தில் ராசு என்கிற சண்முகசேகரன் பழைய கோட்டை ஊராட்சிமன்றத் தலைவராக செயல்பட்டு வந்தார். அவரது தாயார் மீனாட்சி  தற்போது பழையகோட்டை ஊராட்சி மன்றத்  தலைவராக செயல்பட்டு வருகிறார். அவரது  முதுமை மற்றும் இயலாமை காரணமாக ஊராட்சி மன்றத் தலைவர் பணியில் அவர் பங் கேற்பதில்லை. அவருக்கு பதிலாக அவரது  மகன் ஊராட்சித் தலைவராக செயல்படுகி றார். அவரது தாயார் மீனாட்சி வெறுமனே கையெழுத்திடும் வேலையை மட்டும் செய் கிறார்.

ராசு என்கிற சண்முக சேகரன் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தபோது, இந்த கிரா மத்தில் புதிய மனைப்பிரிவுகள் அமைப் பதற்கு அனுமதி அளித்துள்ளார். நகர மற்றும்  ஊரமைப்பு சட்ட விதிமுறைப்படி கிராமங்க ளில் மனைப் பிரிவுகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கு ஊராட்சிமன்றத் தலைவருக்கு  அதிகாரம் இல்லை.  ஆனால் சட்ட விதி முறையை மீறி, தனது சொந்த ஆதாயத்திற் காக கிராமத்தில் மனைப்பிரிவுகளுக்கு அனு மதி அளித்துள்ளார். இதன் மூலம் அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தி இருக்கிறார். குறிப்பாக தங்கம் நகர், குட்டப்பாளை யம் சின்னம்மன் நகர், குட்டப்பாளையம் கும ரன் நகர், வசந்த நகர் ஆகிய இடங்களில்  இவ்வாறு மனைப்பிரிவுகள் அமைக்கப்பட் டுள்ளன. நகர் மற்றும் ஊரமைப்புத் துறையின்  தொழில்நுட்ப அனுமதியோ, அங்கீகாரமோ இல்லாமல் தனியார் மனைப் பிரிவுகளுக்கு அனுமதி அளித்ததுடன், அங்கு கட்டப்பட்ட வீடுகளுக்கும் விதிமுறைகளுக்குப் புறம் பாக அங்கீகாரம் வழங்கி இருக்கிறார். மேலும்  அங்கு தார்ச்சாலை, தெரு விளக்கு, குடிநீர் வசதி செய்வதற்காக விதிமுறைக்குப் புறம் பாக பெரும் தொகை செலவு செய்திருக்கி றார். இது குறித்து காங்கேயம் வட்டார வளர்ச்சி  அலுவலரும் நேரடி தணிக்கை செய்து ஆட்சே பணை பதிவு செய்திருக்கிறார். சுமார் ரூ.1  கோடி அளவுக்கு அரசுக்கு வர வேண்டிய வரு வாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டு இருப்பதாக தணிக்கை ஆட்சேபனை மூலம் தெரிய வருகி றது. இது குறித்து, இழப்பு ஏற்படுத்திய ராசு  என்கிற சண்முகசேகரன் மீது சட்டப்படி பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண் டும்

என்று கடந்த 2021 நவம்பர் 24ஆம் தேதி  மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அளித்தேன். தொடர்புடைய அனைத்து அதி காரிகளுக்கும் புகார் அளித்தும் அவர் மீது  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உயர்நீதிமன்றம் இப்பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண் டும் என்று மூர்த்தி கேட்டுக் கொண்டார். மேலும், இழப்பு ஏற்படுத்திய ராசுவிடம் இருந்து ரூ.99 லட்சத்து 10 ஆயிரத்து 553-ஐ  மீட்பதற்கும், அவர் மீது குற்ற நடவடிக்கை  மேற்கொள்ளவும் உத்தரவு பிறப்பிக்கும் படியும் அவர் நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த மேல் முறையீட்டு மனுவின் மீது விசாரணை நடத்தி, கடந்த ஜனவரி 23ஆம் தேதியன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார் உத்தரவு பிறப்பித்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் பதில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார். அதில் ராசு மீது சட்டப்படி உரிய நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவரிடம்  இருந்து இழப்பீட்டுத் தொகை வசூலிக்கப்ப டும் என்று கூறியிருக்கிறார். எனவே மாவட்ட  ஆட்சியர், தணிக்கை அறிக்கை அடிப்படை யில் மேலும் காலதாமதம் இல்லாமல் சட்டப் படி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண் டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.