திருப்பூர், செப். 28 - திருப்பூரில் குப்பை கொண்டு செல்லும் வாகனத்தில் தூய்மைப் பணியாளர்களை ஏற்றிச் செல்வது மனிதத்தன்மை அற்ற செயல் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி கடும் கண்டனம் தெரிவித்துள் ளது. இது தொடர்பாக தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருப்பூர் மாவட்டத் தலைவர் ச.நந்தகோபால், மாவட்டச் செயலாளர் சி.கே.கனக ராஜ் ஆகியோர் புதன்கிழமை விடுத் துள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது: கொரோனா பெருந்தொற்று காலத்தில், தூய்மை பணியாளர் களின் கால்களைக் கழுவி, அவர் களது பணி தெய்வத்திற்கு ஒப்பானது என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால், தற்போது அந்த தொழிலா ளர்களின் பணி நிலை மிக மோசமாக மாறியுள்ளது. திருப்பூர் மாநகராட்சியில் ஒப் பந்த முறையில் தூய்மைப் பணியை மேற்கொண்டு வரும் எஸ்.டபிள்யூ.எம்.எஸ் தனியார் நிறுவனம் தூய் மைப் பணியாளர்களை பணியிடங்க ளுக்கு அழைத்துச் செல்ல அதே குப்பை வண்டிகளையே பயன்ப டுத்தி வருகிறது. காலாவதியான குப்பை வண்டியில் அந்த பணியா ளர்களை ஏற்றிச் செல்லும் நிறுவனத் திற்கு தடை விதிக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் மாந கராட்சி அதிகாரிகள் மீது துறைரீதி யான நடவடிக்கை மற்றும் மனித உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதைத் தடுத்து நிறுத்தா மல் வேடிக்கை பார்க்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மீதும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி கேட்டுக் கொண் டுள்ளது.