districts

திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி ரூ.30 ஆயிரம் கோடி:

திருப்பூர், மார்ச் 25- இன்னும் ஒரு வார காலத்தில் முடிவ டைய உள்ள நடப்பு நிதியாண்டில் (2021 -  22) திருப்பூர் ஏற்றுமதி 4 பில்லியன் டாலர் (இந்திய ரூபாயில் 30 ஆயிரத்து 536 கோடியை) எட்டி சாதனை படைத்துள்ளது என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அதேநேரம், தொழில் துறை சந்தித்து வரும் உண்மையான வேதனைகளை மறைக்கும் சாதனையாக இந்த புள்ளிவிவரம் உள்ளது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதி நடப்பு நிதியாண்டில் 400 பில்லியன் டாலரை (இந் திய ரூபாயில் 30 லட்சத்து 53 ஆயிரத்து 600 கோடி) எட்டியது என்று கடந்த 23ஆம்  தேதி பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளி யிட்டிருந்தன. இந்த மொத்த ஏற்றுமதியில்  திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி மட்டும் ஒரு சதவிகிதம் அதாவது 4 பில்லியன் டாலர் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மொத்த ஏற்று மதி 400 பில்லியன் டாலரை எட்டி இருப் பதை பிரதமர் மோடி தனது அரசின் “ஆத்ம நிர்பார் பாரத்” திட்டத்துக்கு கிடைத்திருக் கும் வெற்றி என்று குறிப்பிட்டு ட்வீட் செய் திருந்தார்.

ஆனால் “ஒரு பானை சோற்றுக்கு ஒரு  சோறு பதம்” என்பது போல மொத்த ஏற்று மதிக்கு திருப்பூரின் ஏற்றுமதியே சான்றாக உள்ளது. கடந்த ஆண்டு ஏற்றுமதி ரூ.24 ஆயிரத்து 750 கோடியாக இருந்தது, இந்த ஆண்டு ரூ.30 ஆயிரத்து 536 கோடியாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க டாலர் அல்லது இந்திய ரூபாய் மதிப்பில் பார்க்கும்போது பெரிய அளவுக்கு ஏற்று மதி அதிகரித்திருப்பது போல தெரிகிறது. ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நூல் விலை ஏறத்தாழ 80 சதவிகிதம் உயர்ந் திருக்கிறது. மூலப்பொருள் மட்டுமின்றி உதிரி பாகங்கள் விலையும் ஏறத்தாழ 40 முதல் 50 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. இதனால் உற்பத்தி செலவு கடுமையாக அதிகரித்துவிட்டது. அதாவது கடந்த ஆண்டு ஒரு ஆயத்த ஆடையின் விலை ரூ.100 என்றால், இப்போது அதே ஆடை யின் விலை 50 சதவிகிதம் அதிகரித்து ரூ.150 ஆகிறது.  எனவே கடந்த ஆண்டு ஏற்றுமதியான அதே அளவு ஆடை இந்த ஆண்டு ஏற்று மதி ஆகியிருக்குமானால் அதன் பண  மதிப்பு ரூ.37 ஆயிரத்து 125 கோடி ஆகும். ஆனால் தற்போது வெளியிட்டிருக்கும் ஏற்றுமதி கணக்கு ரூ.30 ஆயிரத்து 536 கோடி. இதன்படி உண்மையான ஏற்றுமதி அளவு அதிகரிக்கவில்லை. பணம் தான் வீங்கியுள்ளது என்பது தெரிகிறது.

திருப்பூர் ஏற்றுமதி 4 பில்லியன் டாலர் என அதிகரித்திருப்பதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஏற்று மதியாளர் சங்கத் தலைவர் ராஜா எம்.சண் முகம். பண மதிப்பில் ஏற்றுமதி அதிகரித்தி ருக்கும் நிலையில் ஆடைகளின் எண் ணிக்கை எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்று கேட்டபோது, ஏற்றுமதியாளர் தரப் பினர் அந்த விபரம் இல்லை என்று கூறி விட்டனர். அந்த கணக்கை துல்லியமாக எடுக்க முடியாது என்றும் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் சொல்வது உண்மை யல்ல. ஏற்றுமதியான ஆடைகள் எண்ணிக் கையையும் கணக்கெடுக்க முடியும். ஆனால் அந்த உண்மை விபரம் தெரிந்தால், தற் போது ஏற்றுமதி 4 பில்லியன் டாலர் என்ற இலக்கை எட்டி சாதனை  படைத்திருப்ப தாக கூறுவது காற்று போன பலூன் போல  சுருங்கி விடும். எனவே இந்த சாதனை புள்ளி விபரம் உண்மையான வேத னையை மூடி மறைப்பதாக உள்ளது. அதுமட்டுமின்றி இந்த சாதனை திருப் பூர் சிறு, குறு, நடுத்தர தொழில்களால் சாத்தியமானது என்றும் ராஜா எம்.சண் முகம் கூறியிருக்கிறார். ஆனால் மறுபுறம் இங்குள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர் கடும் நெருக்கடியை சந் தித்து தொழிலில் நீடித்து நிற்க முடியுமா என்று போராடிக் கொண்டிருக்கின்றனர். மொத்தம் ரூ.30 ஆயிரம் கோடிக்கு மேல் ஏற்றுமதி நடைபெற்றிருப்பதில் நான் கைந்து பெரிய நிறுவனங்கள் மட்டும் தலா  ரூ.1000 கோடிக்கு மேல் ஏற்றுமதி செய் திருக்கின்றன. இதன் மூலம் மட்டும் ரூ.5  ஆயிரம் கோடி ஏற்றுமதி ஆகியிருக்கிறது. தவிர ஏறத்தாழ 100 நிறுவனங்கள் ரூ.200 கோடி, ரூ.100 கோடி வரை ஏற்றுமதி செய் துள்ளன. அதாவது மொத்த ஏற்றுமதி ரூ.30 ஆயிரம் கோடியில் திருப்பூரின் முன்னணி 100 நிறுவனங்கள் (10 சதவிகிதம்)  மட் டும் ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் (60 சத விகிதம்) ஏற்றுமதி செய்துள்ளன. எஞ்சிய  900 நிறுவனங்கள் சேர்ந்துதான் மீதி தொகைக்கு ஏற்றுமதி செய்கின்றன. ஒருபு றம் விரல் விட்டு எண்ணக்கூடிய பெரிய நிறுவனங்கள் ஏற்றுமதி அளவை அதிக ரித்து கொண்டுள்ளன, மறுபுறம் சிறு, குறு நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யும் பங்கு குறைந்து கொண்டே வருகிறது. 

ஒன்றிய அரசு பின்பற்றும் பெரு நிறுவ னங்களுக்கு ஆதரவான கார்ப்ரேட்மய கொள்கைகள் சிறு, குறு, நடுத்தர தொழில் செய்வோருக்கு சாதகமாக இல்லை,  எனவேதான் திருப்பூரின் மிகப்பெரும் பான்மை தொழில் முனைவோர் நெருக் கடியை சந்தித்து தாக்குப்பிடிக்க முடியா மல் தத்தளித்துக் கொண்டிருக்கும்போது, ஏற்றுமதி அதிகரித்திருப்பதாக எதார்த்த நிலையை திசை திருப்பும் புள்ளி விபரம் சாதனையாக முன் நிறுத்தப்படுகிறது.  திருப்பூர் ஏற்றுமதி தொழிலுக்கு மட்டு மல்ல, ஒட்டுமொத்த ஏற்றுமதி தொழில் துறையிலும் இதுதான் நிலை என்பதை சொல்லவும் வேண்டுமோ?

-வே.தூயவன்