கோபி, நவ.8- கோபிசெட்டிபாளையம் அருகே சாலையின் மையத் திட்டில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதனையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் உருவாகியது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே, அப்பணியின் காரணமாக சாலையின் நடுவே மையத் திட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அந்த மையத்திட்டுகளில் எச்சரிக்கை வில்லைகள் ஒட்டப்ப டாததால் சத்தியிலிருந்து கோபி நோக்கி வந்த கார், பேருந்து நிலையம் முன்பு இருந்த மையத்திட்டில் மோதி விபத்துக் குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கார் ஓட்டுனரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து தகவலறிந்து வந்த போலீ சார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்விபத்து சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரி சல் ஏற்பட்டது.