districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

பல்லடம் அருகே விபத்து –  6 பேர் படுகாயம்

திருப்பூர், ஏப்.21- பல்லடம் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், ஏற்பட்ட விபத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர்.  திருப்பூர் மாவட்டம், பல்லடம் கோவை - திருச்சி தேசிய  நெடுஞ்சாலையில் கோடங்கிபாளையம் பிரிவு அருகே ஞாயிறன்று அதிகாலை சாலையோரம் சரக்கு வேன் நின்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் அதிவேகமாக வந்த சொகுசு கார் சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு  வேன் மீது வேகமாக மோதியது. இதில் காரில் இருந்த 6  பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்த போலீசார் விரைந்து  வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், காரில் வந்தது கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வரும்  சங்கீதன் (22), மணிகண்டன் (19), குமரன் (20), கவின் (21),  கவுதம் (23), ஆனந்தன் (21) என்பது தெரியவந்தது. போலீ சார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த  விபத்தில் காயமடைந்த ஒரு மாணவரின் நிலை கவலைக்கி டமாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

பூங்காவில் மலர் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணி தீவிரம்

உதகை, ஏப்.21- மழை பெய்யாததால் மலர் செடிகளுக்கு நாள் தோறும்  தண்ணீர் பாய்ச்சும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வரு கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய் யும். அதன்பின், அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள்  வடகிழக்கு பருவமழை பெய்யும். ஏப்ரல் மாதம் சில தினங்கள்  கோடை மழை கொட்டி தீர்க்கும். இதனால், மலர் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்கா விற்கு நடவு செய்யப்பட்டுள்ள மலர் செடிகளுக்கு தேவை யான தண்ணீர் கிடைக்கும்.  ஆனால், இம்முறை இதுவரை  உதகையில் மழை பெய்யவில்லை. கடந்த வாரம் ஒரு சில  தினங்கள் குன்னூர் மற்றும் மஞ்சூர் பகுதிகளில் மழை  பெய்தது. ஆனால், உதகையில் மட்டும் மழை பெய்ய வில்லை. இதனால், மலர் செடிகளுக்கு போதுமான அளவு  தண்ணீர் கிடைக்காமல் போனதால், தாவரவியல் பூங்கா வில் மலர்கள் பூப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மலர் கண்காட்சிக்கு ஒரு மாத காலமே  உள்ள நிலையில், தற்போது பூங்காவை தயார் செய்யும்  பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நாள்தோறும் மலர் செடிகள் மற்றும் தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள மலர்  செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணியில் ஊழியர்கள் ஈடு பட்டு வருகின்றனர். தற்போது, பூங்காவில் உள்ள குளங்க ளில் உள்ள தண்ணீரை கொண்டு மலர் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றப்பட்டு வருகிறது. மழை பெய்யவில்லை எனில், இந்த  குளங்களிலும் தண்ணீர் வற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மத்திய சிறையில் வாசகர் வட்டம்

சேலம், ஏப்.21- சேலம் மத்திய சிறையில் வள்ளுவர் வாசகர் வட்டத்தின்  சார்பில், 25 ஆவது வார விழா சிறப்பாக கொண்டாடப் பட்டது. தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை  தலைமை இயக்குநர் மகேஸ்வர் தயால் ஆலோசனை யின்படி, சேலம் மத்திய சிறை கைதிகளுக்கு பல்வேறு  சீர்திருத்த நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடத்தப்பட்டு வரு கின்றன. அதன்ஒருபகுதியாக, சிறைவாசிகளின் வாசிக்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில், சனிக்கிழமைகளில் வள்ளுவர் வாசகர் வட்டம் நடத்தப்பட்டு வருகிறது. வாரந்தோறும் காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெற்று வரும் வள்ளுவர் வாசகர் வட்டத்தின் 25 ஆவது  வார விழா சேலம் மத்திய சிறையில் சனியன்று நடை பெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சேலம் வரலாற்று  சங்கப் பொதுச்செயலாளர் பர்னபாஸ் பங்கேற்று விழாவை  சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில், எழுத்தாளர் பூமிபாலகன் எழுதிய, ‘பசுங்கரையில் ஒரு வசந்தம்’ என்ற புத்தகத்தின் கருப்பொருளை தண்டனை சிறை கைதி சரவணன் உரை  நிகழ்த்தினார். சிறப்பாக செயல்பட்ட சிறை கைதிகளுக்கு புத்தகம் மற்றும் சிறை பயன்பாட்டுக்கு பிளாஸ்டிக் பக்கெட்  வழங்கப்பட்டன. முன்னதாக, இந்நிகழ்ச்சிக்கு சிறை கண்காணிப்பாளர் (பொ) வினோத் தலைமை வகித்தார். மருத்துவர் பிரதீப், மனநல நிபுணர் வைஷ்ணவி, சிறை  அலுவலர் கோவிந்தசாமி, மனநல ஆலோசகர் செல்வ குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பறக்கும் படை வாகன சோதனை நிறுத்தம்

சேலம், ஏப்.21- தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வெள்ளியன்று நடைபெற் றது. இதையொட்டி, கடந்த ஒரு மாதத்துக் கும் மேலாக தீவிர வாகனச் சோதனை நடத்தப்பட்டு வந்தது. ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லப்பட்ட பணம், தங்க  நகைகள், வெள்ளிப் பொருட்கள் பறிமு தல் செய்யப்பட்டு, கருவூலத்தில் ஒப்ப டைக்கப்பட்டன. இதனால் வியாபாரிகள் அத் தியாவசியப் பணிகளுக்குக்கூட பணத்தை எடுத்துச் செல்ல முடியாமல் அவதியுற்று வந்தனர். இந்நிலையில், வாக்குப்பதிவு முடி வடைந்ததைத் தொடர்ந்து, மாநில எல்லை யில் மட்டும் வாகனச் சோதனை நடத்த தேர் தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. இதை யடுத்து, சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வந்த பறக்கும் படையினரின் வாகன சோதனை நிறுத்தப்பட்டது.

விவசாய நிலத்துக்குள் புகுந்த யானைக் கூட்டங்கள்

நீலகிரி, ஏப்.21- கூடலூர் அருகே விவசாய நிலத்துக்குள் புகுந்த யானைக் கூட்டங்கள் வாழை மரங் களை சேதப்படுத்திச் சென்றன. கூடலூர் வனப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. வனப்பகுதியில் தற் போது கடும் வறட்சி நிலவி வருவதால் வன விலங்குகள் உணவு தேடி, தேயிலை மற்றும்  வாழைத்தோட்டம், குடியிருப்பு பகுதிக்கு படையெடுத்து வருகின்றன. இதனால் மனித -விலங்கு மோதல் சம்பவங்களும் நடை பெற்று வருகின்றன. இந்த நிலையில் வெள்ளி யன்று இரவு வனத்தை விட்டு வெளியேறிய நான்கு காட்டு யானைகள், கூடலூரை அடுத் துள்ள ஏழுமுறம் பகுதியில் வசிக்கும் ஜேக்கப்  ஜோஸ் என்பவரது விவசாய நிலத்தில் புகுந்து  சுமார் 600க்கும் மேற்பட்ட வாழை மரங்களை  சேதப்படுத்தி உள்ளன. அறுவடைக்கு சுமார் ஒரு மாதம் உள்ள  நிலையில், குலை தள்ளி இருந்த நேந்திரன்  வாழை மரங்களை சேதப்படுத்தி உள்ள தால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதே போல் அருகில் இருந்த மற்றொரு தோட்டத் தில் சுமார் 300க்கும் மேற்பட்ட பாக்கு மரங்க ளையும் சேதப்படுத்தி உள்ளன. தொடர்ந்து இரவில் மொளபள்ளி, குனில் வயல் பகு திக்கு சென்ற காட்டு யானைகள் அங்கு வசிக் கும் ஸ்ரீமதுரை ஊராட்சி தலைவர் சுனில் என் பவரது வீட்டின் முன்பிருந்த பாக்கு மரங் களை சேதப்படுத்தி உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இந்த யானை கூட்டம் விவசாய நிலங்களுக்குள் வந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவதாகவும், விரட்டினாலும் இரவு நேரத்தில் அவை மீண்டும் ஊருக்குள் வந்து விடுவதாகவும் கவலை தெரிவித்துள் ளனர். சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு வனவிலங்குகள் விவசாய  பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க நிரந்தரமான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத் துள்ளனர். சம்பவ பகுதிக்கு வனச்சரகர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான வனத்து றையினர் சென்று பார்வையிட்டு சேதங் களை மதிப்பீடு செய்துள்ளனர்.

உடுமலை: அணைப் பூங்காவை திறக்கக் கோரிக்கை

உடுமலை, ஏப்.21- திருமூர்த்தி மலைக்கு வரும் சுற் றுலா பயணிகள், அணை பூங்காவை திறக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். உடுமலை அருகே திருமூர்த்தி மலை சுற்றுலா தலம் உள்ளது. இங்கு  திருமூர்த்தி அணை, அமணலிங்கேஸ் வரர் கோயில், பஞ்சலிங்க அருவி, வண்ண மீன் காட்சியகம், நீச்சல் குளம்  உள்ளிட்டவை உள்ளன. தினசரி ஏராள மான சுற்றுலா பயணிகள் இங்கு வரு கின்றனர். அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்கு அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது கோடை வெயில் கொளுத்துவதால் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த பலரும் குடும்பத்துடன் திருமூர்த்தி மலைக்கு வருகின்றனர். பஞ்சலிங்க அருவியில் குறைவான தண்ணீர் விழுந் தாலும் அதில் குளித்து மகிழ்கின்றனர். திருமூர்த்தி அணை அருகே பூங்கா உள்ளது. இந்த பூங்கா எப்போதும் பூட் டியே கிடக்கிறது. அங்குள்ள விளை யாட்டு உபகரணங்கள் பயனின்றி கிடக்கின்றன. குடும்பத்துடன் வருபவர்கள் உணவு சாப்பிடவோ, இளைப்பா றவோ இடமின்றி சாலையோரத்தில் கடும் வெயிலில் அமர்ந்து உணவ ருந்தும் நிலை உள்ளது. அணை பகுதி யில் பெரிய அளவில் பூங்கா அமைப் பதற்கான ஆய்வுகள் நடைபெற்றுள் ளன. இதற்கான பணி எப்போது துவங் கும் என தெரியவில்லை. அதுவரை, தற்போதுள்ள பூங்காவை திறந்து விட  வேண்டும் என சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.

குமாரபாளையம்: 74.06 சதம் வாக்குப்பதிவு

நாமக்கல், ஏப்.21- ஈரோடு மக்களவை தொகுதிக்குட்பட்ட குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் 74.06 சதவிகிதம் வாக்குகள் பதி வாகியுள்ளது. ஈரோடு மக்களவை தொகுதியில் நாமக்கல் மாவட்ட காவிரி கரையோர குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியும் அடங்கும். குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் 279 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இத்தொகுதிக்கு, கண்ட்ரோல் யூனிட் 334, பேலட் மெசின் 334, வி.வி.பேடு 362, ஆகியவை  கொடுக்கப்பட்டன. இத்தொகுதியில், சுமார் 2 லட்சத்து 57  ஆயிரத்து 740 வாக்காளர்கள் இருந்த நிலையில், அனைத்து  வாக்குச்சாவடிகளிலும் சுமார் 74.06 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அனைத்து வாக்கு இயந்திரங்களும் ஈரோடு  ஐஆர்டிடி கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக் கப்பட்டுள்ளன.

சாலை விரிவாக்கப் பணிக்காக மரங்களை வெட்ட அனுமதியில்லை

கோவை, ஏப்.21- பொள்ளாச்சி அருகே சாலை விரிவாக்கப் பணிக் காக, சாலையோரம் உள்ள மரங்களை வெட்ட அனுமதி யில்லை என பொள்ளாச்சி சார் ஆட்சியர் தெரிவித்துள் ளார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள  சுப்பேகவுண்டன்புதூர் கிராமம், தாத்தர் பிரிவு பகுதி யில், சாலை விரிவாக்க பணிக்கு இடையூறாக இருப்பதா கக்கூறி சாலையின் இருபுறமும் உள்ள 27 மரங்களை  வெட்ட நெடுஞ்சாலைத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்பிரச்சனை சம்பந்தமாக பொள்ளாச்சி சார் ஆட்சி யர் ஆ.கேத்தரின் சரண்யா விடுத்துள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது, அம்பராம்பாளையம்  முதல் சேத்துமடை வரை உள்ள சாலையில், விரி வாக்க பணி மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டு, அதற் காக 27 மரங்களை அகற்ற அனுமதி கோரி நெடுஞ்சா லைத்துறையினர் வருவாய்த்துறையிடம் முன்மொ ழிவுகள் கொடுக்கப்பட்டுள்ளது.இதைத்தொ டர்ந்து வருவாய்த்துறையினர் புறத்தணிக்கை செய்த தில், அம்பராம்பாளையம் முதல் சேத்துமடை வரை  உள்ள சாலை தற்போது வாகன போக்குவரத்துக்கு போதுமானதாக உள்ளது. மேலும், மேற்கண்ட பகு திகளில் உள்ள மரங்கள் வெட்டி அகற்றப்படும் பட்சத்தில் இயற்கை பாதிப்புகளான மழைப்பொழி வின்மை, மண்ணரிப்பு மற்றும் இயற்கை அழகு பாதிக் கப்படும். எனவே, மரங்களை வெட்ட அனுமதி கூறிய  முன்மொழிவுகள் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அவ் விடத்தில் மரங்கள் வெட்டப்படும் நிகழ்வு தொடர்பான எவ்வித வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என தெரி விக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு, மேற்கு பகுதியில் குறைந்த அளவு வாக்குபதிவு

ஈரோடு, ஏப்.21- ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் ஈரோடு கிழக்கு,  ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம், தாராபுரம்,  குமாரபாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளன. ஈரோடு கிழக்கு, மேற்கு தொகுதிக்குட்பட்ட பகுதிக ளில் கடந்த தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்த வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டு வீடு வீடாக சென்று விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆனாலும் இதில் எந்த முன் னேற்றமும் ஏற்படவில்லை என்பது தற்போதைய வாக்கு பதிவு நிலவரத்தில் தெரியவந்துள்ளது. இந்த தேர்தலில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி யில் உள்ள குமாரபாளையம், மொடக்குறிச்சி, காங்கே யம், தாராபுரம் ஆகிய சட்டன்ற தொகுதிகளில் 70 சதவீத  வாக்குப்பதிவு கடந்துவிட்ட நிலையில், ஈரோடு கிழக்கு  மற்றும் ஈரோடு மேற்கு தொகுதியில் மட்டும் 70 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகள் பதிவாகி உள் ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தில் 66.05 சதவீதமும்,  ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் 65.73 சதவீதம்  வாக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு  தேர்தலோடு ஒப்பிடுகையில் இந்த தேர்தலில் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியானது 3.17 சதவீதம் குறைந் துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் 1.33 சதவீதம் குறைந்துள்ளது.

அரசு பேருந்துகள் நிறுத்தப்படும் ஓட்டல்களில் உணவுகள் இருமடங்கு விலைக்கு விற்பனை

கோவை, ஏப்.21- அரசு பேருந்துகள் நிறுத்தப்படும் ஓட்டல்களில் உணவு பொருட்கள் இருமடங்கு விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து பல்லடம் அறிவொளி நகரில் வசிக்கும்  ராஜசேகர் கோவை மண்டல அரசு போக்குவரத்து கழகத் திற்கு அளித்துள்ள புகார் மனுவில், கடந்த 7ஆம் தேதி  அரசு பேருந்து மூலம் பல்லடத்தில் இருந்து திருநெல் வேலி சென்றேன். தாராபுரம் - ஒட்டன்சத்திரம் செல்லும்  வழியில் ஓட்டல் ஒன்றில் பேருந்து நின்றது. அங்கு இட்லி ஒன்று ரூ.15, தோசை ரூ.40, வாழைப்ப ழம் ரூ.15 என அனைத்து உணவு பொருட்களும்  இருமடங்கு விலை வைத்து விற்பனை செய்யப்பட் டன. இதுகுறித்து ஓட்டல் உரிமையாளரிடம் கேட்ட தற்கு இந்த விலைக்கு தான் விற்க முடியும். தேவை யென்றால் சாப்பிடுங்கள். இல்லையெனில் திரும்பிச் செல்லுங்கள். வியாபார நேரத்தில் இங்கு சட்டம் பேச  வேண்டாம் என்றார். திருப்பூர், மதுரை, திண்டுக்கல், கோவை அரசு போக்குவரத்து கழக தலைமை அதிகாரிகளுக்கு ஒவ் வொரு மாதமும் லஞ்சமாக தண்டம் கட்ட வேண்டிய  நிலை உள்ளது. இது தவிர அரசு பேருந்து நடத்து நர் மற்றும் ஓட்டுநர்களுக்கு லஞ்சமாக தண்டம் செலுத்து கிறோம். இந்த விலைக்கு விற்றால் தான் ஓட்டல் நடத்த  முடியும். நீங்கள் எங்கு புகார் கொடுத்தாலும் அதை பற்றி  எங்களுக்கு கவலை இல்லை என்று ஓட்டல் உரிமையா ளர் கூறினார். ஆகவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் கூறியுள் ளார்.

யானை தாக்கியதில் மூதாட்டி காயம்

உதகை, ஏப்.21- கூடலூர் அருகே காட்டு யானை தாக்கிய தில் மூதாட்டி காயமடைந்தார். கேரள மாநிலம், கோட்டயம் பகுதியைச்  சேர்ந்த குடும்பத்தினர் கூடலூர் வழியாக மைசூருக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்நி லையில், சனியன்று அதிகாலை 5.30  மணிக்கு கூடலூர்-மைசூரு தேசிய நெடுஞ் சாலையில் உள்ள தொரப்பள்ளி சோதனைச் சாவடி அடைக்கப்பட்டிருந்ததால் சோத னைச் சாவடி அருகே காரில் காத்திருந்தனர்.  அப்போது, காரிலிருந்து தங்கம்மா(62) என்ற  மூதாட்டி கீழே இறங்கியுள்ளார். அப்போது  திடீரென காட்டிலிருந்து வந்த யானை மூதாட்டி யைத் தாக்கியது. காயமடைந்த மூதாட்டியை வனத் துறையினர் மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். பின்பு அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு உயர் சிகிச்சைக்காக உதகை அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர்.

உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

உதகை, ஏப்.21- கோடை காலத்தை அனுபவிக்க உதகை யில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.  நீலகிரி மாவட்டம், உதகைக்கு தினந் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பய ணிகள் வந்து செல்கிறார்கள். இந்நிலையில்  ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயில் சுட் டெரிக்கும் கோடை காலம் என்பதால் குளிர்  சீதோஷ்ணநிலை நிலவும் உதகைக்கு லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதனால் இந்த 2 மாதங் கள் சீசன் காலங்களாக கருதப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக நாடாளுமன்ற தேர்தலை  முன்னிட்டு தலைவர்களின் பிரச்சாரம் மற்றும்  பறக்கும் படை அதிகாரிகளின் சோதனை என  நீடித்தது. இதனால் நீலகிரிக்கு வரும் சுற்று லாப் பயணிகள் வருகை குறைந்து காணப் பட்டது. இதனை அடுத்து வெள்ளியன்று நாடாளுமன்ற தேர்தல் நிறைவு பெற்றதை தொடர்ந்து தற்போது நீலகிரிக்கு வரும் சுற்று லாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள் ளது. அங்குள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா  பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா, குன் னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட இடங்களில் சுற் றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.  மேலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை யால் உதகையில் உள்ள காட்டேஜ்கள், விடு திகள் நிரம்பி வழிகின்றன. மேலும் உதகை யில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்  காணப்பட்டது. மேட்டுப்பாளையம் - உதகை  செல்லும் சாலையில் வாகனங்கள் ஊர்ந்த படி பயணித்தன. நீண்ட வரிசையில் பல மணி  நேரம் காத்திருந்து வாகனங்கள் சென்றன. இதேபோல மேட்டுப்பாளையத்தில் இருந்து  குன்னூர் மற்றும் குன்னூரில் இருந்து உத கைக்கு இயக்கப்படும் மலை ரயிலிலும் சுற்று லாப் பயணிகள் ஆர்வத்துடன் பயணித்த னர்.

நீலகிரியில் 70.93 சதவீதம் வாக்குப் பதிவு

உதகை, ஏப்.21- நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக் குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதியில் 70.93  சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் உதகை, குன்னூர், கூடலூர், பவானி சாகர், மேட்டுப்பாளையம் மற்றும் அவி நாசி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இதில், 14 லட்சத்து 28 ஆயிரத்து 252 வாக்காளர்கள் இடம் பெறிருந்தனர். 6  தொகுதியிலும் மொத்தம் 809 இடங்க ளில் 1,619 வாக்குசாவடி மையங்கள்  அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில்  வெள்ளியன்று 18 ஆவது நாடாளு மன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. வழக்கமாக நீலகிரி மாவட்டத்தில் வாக்குப்பதிவு மந்தமாக துவங்கும். ஆனால், வெள்ளியன்று காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு விறு விறுப்பாக துவங்கியது. இதனால், இம்முறை வாக்குப்பதிவு  எண்ணிக்கையும் சற்று அதிகரித்துள் ளது. இதில், பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் 76.08 சதவீதமும், உதகை  சட்டமன்ற தொகுதியில் 67.25 சதவீத மும், கூடலூர் சட்டமன்ற தொகுதியில்  67.05 சதவீதமும், குன்னூர் சட்டமன்ற தொகுதியில் 65.3 சதவீதமும், மேட்டுப் பாளையம் சட்டமன்ற தொகுதியில் 72.28 சதவீதமும், அவிநாசி தொகுதி யில் 72.8 சதவீதம் என நீலகிரி தொகு தியில் 70.93 சதவீதம் வாக்குகள் பதிவா கியிருந்தன.

புல்தரையை பயன்படுத்த தடை விதிப்பு

உதகை, ஏப்.21- உதகை தாவரவியல் பூங்காவில் பராமரிப்புப் பணி  காரணமாக புல்தரையை பயன்படுத்த சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், உதகை தாவரவியல் பூங்காவில் 17  ஏக்கர் பரப்பளவில் புல்தரை அமைந்துள்ளது. இந்த பூங்கா விற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் புல்தரையில் விளையாடி  மகிழ்வர். இந்நிலையில், மே மாதம் நடைபெறவுள்ள மலர்  கண்காட்சிக்காக  புல்தரையில் பராமரிப்புப் பணிகள் நடை பெற்று வருகின்றன. இதனால், இரண்டு வாரங்களுக்கு புல் தரையை பயன்படுத்த சுற்றுலாப் பயணிகளுக்குத்  தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் சிபிலா மேலி கூறியதாவது, தாவரவி யல் பூங்காவில் உள்ள  புதிய புல்கள் வளர்ந்து மைதானம்  மீண்டும் புதுப்பொலிவு பெறும் விதமாக இரண்டு வாரங்க ளுக்கு புல்தரையைப் பயன்படுத்த சுற்றுலாப் பயணிகளுக் குத் தடை விதிக்கப்படுகிறது, என்றார்.

நாட்டு சர்க்கரையின் விலை உயர்வு

நாட்டு சர்க்கரையின் விலை உயர்வு ஈரோடு, ஏப்.21- நாட்டு சர்க்கரை மூட்டைக்கு ரூ.30 உயர்ந்து விற்பனை யானது. என வெல்ல சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர். ஈரோடு அடுத்த சித்தோடு வெல்ல சந்தையில் வாரந்தோ றும் சனிக்கிழமையன்று ஏலம் மூலம் வெல்ல மூட்டைகள் (30  கிலோ) விற்பனை செய்யப்படும். இதன்படி, இந்த வாரம்  சந்தையில் நாட்டு சர்க்கரை 2,000 மூட்டையும், உருண்டை  வெல்லம் 2,200 மூட்டையும், அச்சு வெல்லம் 200 மூட்டை யும் வரத்தானது. இதில், நாட்டுச்சர்க்கரை மூட்டை ஒன்று  ரூ.1,200 முதல் ரூ.1,280 வரையும், உருண்டை வெல்லம் ரூ.1,330 முதல் ரூ.1,380 வரையும், அச்சு வெல்லம் ரூ.1,350  முதல் ரூ.1,390 வரை என்ற விலையில் விற்பனையானது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் வெல்லம் வரத்து குறைந்து  காணப்பட்டது. இதனால், இந்த வாரம் உருண்டை வெல் லம் மற்றும் அச்சு வெல்லம் மூட்டைக்கு ரூ.60 உயர்ந்தும்,  நாட்டு சர்க்கரை மூட்டைக்கு ரூ.30 உயர்ந்து விற்பனை யானது.