கோவை மாவட்டம், பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் ரூ.3 கோடியே 15 லட்சம் செலவில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவு முதல் தளத்தில் ஒருங்கிணைந்த அவசர சிகிச்சை பிரிவை இணைக்கும் வகையில் இணைப்பு சாய்தளத்துடன் கூடிய கட்டிடம் மற்றும் ஒருங்கிணைந்த பரிசோதனை கூடம் ஆகியவற்றை மருத்து வம் மற்றும் மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் திறந்து வைத்தார். அப்போது, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்திரம் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.