districts

அரசியல் சாசன உறுதிமொழி ஏற்பு

தருமபுரி, ஜன.27- சமூக நல்லிணக்க மேடையின் சார்பில் அரசியல் சாசன உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. குடியரசு தினத்தை முன்னிட்டு, தருமபுரியில் அண்ணல் அம்பேத்கர் சிலை அருகே அரசியல் சாசன உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது. சமூக நல்லிணக்க மேடையின் ஒருங்கிணைப்பாளர் பொ.மு.நந்தன் தலைமை வகித்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் அ.குமார், மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, ஆர்.மல்லிகா, தி.வ.தனுசன், நகரச் செயலாளர் ஆர்.ஜோதிபாசு, சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டப் பொறுப்பாளர் எஸ்.கிரைஸாமேரி, மாவட்டச் செயலாளர் டி.ஏசுதாஸ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் என்.சுபேதார், செயலாளர் டி.பி.பைரோஸ், இந்திய முஸ்லீம் லீக் மாவட்டத் தலைவர்கள் நவ்சாத், சிக்கந்தர் சுலைமான், விசிக மண்டல துணைச்செயலாளர் மின்னல் சக்தி, தொகுதி செயலாளர் சக்தி, மாவட்ட துணைச்செயலாளர் ஆதி தமிழன், மகளிரணி மாவட்ட அமைப்பாளர் விடுதலைமதி, மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ஜெயா, நிர்வாகிகள் நிர்மலா ராணி, கே.சுசிலா, தமிழ்மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.