districts

img

அரசியலமைப்பை பாதுகாப்போம்! ததீஒமு சார்பில் உறுதிமொழி ஏற்பு

கோவை, டிச.24 இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் என, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. கோவை, புலியகுளம் பெரியார் சிலை முன்பு தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோவை மாவட்டக் குழு சார்பில், ஆயிரம் முறை அம்பேத்கர் பெயர் சொல் வோம்! அரசமைப்பை பாதுகாப்போம்! என்ற முழக்கத் துடன் அண்ணல் அம்பேத்கர் படம் முன்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு செவ்வாயன்று நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு மாவட்ட துணைச் செயலாளர் த.நாகராஜ் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சுரேஷ், மாவட்டக்குழு உறுப்பி னர் மகேஸ்வரன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி மாவட்டச் செயலாளர் இரா.ஆறுச்சாமி, மாவட்ட துணைத் தலைவர் ரத்தினகுமார், தமிழ்நாடு திராவிடர் சுயமரியாதை கழகத்தின் தலைவர் நேருதாஸ், தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்  மாவட்டச் செயலாளர் அ.கரீம், அகில இந்திய வழக்கறி ஞர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.ஜோதிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.