திருப்பூர், பிப்.15- தமிழக அரசின் குடற்புழு ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருப்பூர் ஒன்றியம் இடுவாய் ஊராட்சி, அரசு உயர்நிலைப் பள் ளியில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்று குடற்புழு ஒழிப்பு மாத் திரை சாப்பிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. செவ்வாயன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட் சியர் எஸ்.வினித், இடுவாய் ஊராட்சி மன்ற தலைவர் க.கணே சன், அரசு உயர் அதிகாரிகளும், அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குடற் புழு ஒழிப்பு மாத்திரை வழங்கி, அவர்களோடு அனைவரும் மாத்திரை சாப்பிட்டனர். பள்ளியின் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்ததும் இடுவாய் ஆரம்பப் பள்ளிக்கு ரூ.61 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 4 புதிய வகுப்பறைகள் கட்டுமான பணியை ஆட்சியர் எஸ்.வினீத் பார்வையிட்டார். இடுவாயில் அண்ணாமலை கார்டன் பகுதியில் சுமார் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கால்நடை மருத் துவமனை கட்டுமான பணிகளையும் அவர் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அரசுத் துறையினர் கலந்து கொண்டனர்.