ரயில் பயணத்தில் முதியவரிடம் அநாகரீகமாக நடந்து கொண்டும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளரை விமர்சித்த பாஜக பிரமுகர் நாரயணனை கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ததீஒமு மாவட்ட தலைவர் பி.பி.பழனிசாமி, சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்ரமணியன், விதொச கே.சண்முகவள்ளி, ததீஒமு மாவட்ட செயலாளர் மா.அண்ணாதுரை, மாதர் சங்க பா.லலிதா உள்ளிட்ட திரளனோர் பங்கேற்றனர்.