districts

img

சிறு குறு தொழில் நடத்துவதற்கான உரிமை கட்டணத்தை ரத்து செய்திடுக

நாமக்கல், மார்ச் 15- பள்ளிபாளையம் நக ராட்சி அலுவலக கூட்டரங் கில் நகர்மன்ற அவசரக் கூட் டம் நடைபெற்றது. இதில்  சிறு குறு தொழில் நடத்துவ தற்கான உரிமை கட்ட ணத்தை ரத்து செய்திட வேண்டுமென வார்டு உறுப் பினர்கள் கேட்டுக்கொண் டார்.  நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் நகர் மன்ற அவசரக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு நகர்மன்றத் தலைவர் மோ.செல் வராஜ், துணைத் தலைவர் ப.பாலமுருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். நகராட்சி ஆணையாளர் தாமரை முன்னிலை வகித் தார். இதில் திமுக, அதிமுக, மதிமுக உள் ளிட்ட கட்சிகளை சேர்ந்த வார்டு உறுப்பினர் கள் கலந்து கொண்டனர்.  இதில், நகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால், நகராட்சிக்கு என தனி யாக ஆம்புலன்ஸ் வசதி செய்து தர வேண்டும் எனவும்,  காவிரி ஆற்று நீரை பருகும் பெண்களில்,  அதிகளவு புற்றுநோயாளி பெண்கள் காவிரி கரையோரம் வசிப்பதாக, செய்தித் தாள்களில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் காவிரி ஆற்றில் இருந்து எடுக்கப் படும் நீர் எத்தகைய முறையில் சுத்தம்  செய்யப்படுகிறது?  சுத்தம் செய்யப்படு வதற்கு என்னென்ன மூலப் பொருட்கள் பயன் படுத்தப்படுகிறது. மேலும் நீரின் தர அளவு என்ன என்பதை தெரியப்படுத்த வேண்டும் உள்ளிட்டு மன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.  மேலும், நகராட்சி சார்பில் தொழில் நடத்துவதற்கான உரிமை கட்டணத்தை கட்டச் சொல்லி நகராட்சி நிர்வாகத்தினர் வலி யுறுத்தி வருகின்றனர். மேலும் சிறு, குறு தொழில்களாக இருக்கக்கூடிய விசைத்தறி தொழில் கூடங்களுக்கு தொழில் நடத்து வதற்கான  லைசன்ஸ் பெற வேண்டுமென கட்டணம் கேட்கிறார்கள். ஏற்கனவே மின்சார  கட்டண உயர்வு, ஜிஎஸ்டி, நூல் விலை ஏற் றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விசைத்தறி தொழில்  நசிவை சந்தித்து  வருகிறது. சிறிய அளவில் 4 விசைத்தறி களை கொண்டு இயங்கும், விசைத்தறிக்கூ டங்களுக்கு உரிமை கட்டணத்தை வரியை  ரத்து செய்திட வேண்டுமென வலியுறுத்தி னர்.  இதற்கு பதிலளித்த நகர் மன்றத் தலை வர் அப்படி  வரியை ரத்து செய்திட நகராட் சிக்கு அதிகாரம் இல்லை. இருந்தபோதிலும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என தெரிவித்தார்.