districts

img

உயர்த்தப்பட்ட மின் கட்டணம் குறைப்பு விசைத்தறியாளர்கள் அரசுக்கு நன்றி

ஈரோடு, மே 3- கோரிக்கையை ஏற்று நிலுவையில் உள்ள விசைத் தறி மின் கட்டணத்தை கட்டு வதற்கு ஆறு தவணையாக பிரித்து  கட்டணம் செலுத்த ஆணை பிறப்பித்ததற்கு மின்துறை அமைச்சர் செந் தில்பாலாஜியை சந்தித்து  தமிழ்நாடு விசைத்தறி சங்கங் களின் கூட்டமைப்பினர் நன்றி தெரிவித்தனர்.   தமிழ்நாடு விசைத்தறி சங்கங்கள் கூட்ட மைப்பின் மாநில செயலாளர் இரா.வேலுச் சாமி, மாநில ஒருங்கிணைப்பாளர் டிஎஸ்ஏ. சுப்ரமணியன், மாநில அமைப்பு செயலா ளர் மற்றும் செய்தி தொடர்பாளர் பா.கந்த வேல் மற்றும் கூட்டமைப்பின் திருப்பூர் மற் றும் கோவை மாவட்ட பொறுப்பாளர்கள் ஆகி யோர் மின்துறை அமைச்சர் செந்தில்பாலா ஜியை சென்னையில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். மேலும்,  மின் கட்டணத்தில் உள்ள அபராத தொகை கழித்தும் மற்றும் 12-09-2022 முதல் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைத் தும், அதனை உடனடியாக கணிப்பொறியில் அப்லோடு செய்து கொடுக்க கோரிக்கை மனு கொடுத்தனர். அக்கோரிக்கை மனுவை ஏற்றுக் கொண்ட அமைச்சர் மற்றும் மின்சார துறை ஆணையர் ஆகியோர், பத்து நாட்களுக் குள் அபராத தொகையை அனைத்து மின்  இணைப்பிலிருந்து கழித்தும், உயர்த்தப் பட்ட மின் கட்டணத்தை குறைத்துக் கொடுக் கப்படும் என்றும் உறுதியளித்தனர்.  எனவே, அனைத்து விசைத்தறி உரிமை யாளர்களும் இன்னும் பத்து நாள் பொறுத்தி ருந்து, அனைத்து நிலுவைத் தொகை அபராத கட்டணம் மற்றும் உயர்ந்த மின் கட்டணத்தை  மாற்றி புதிய மின் கட்டணம்  தொடர்பாக கணிப் பொறியில்  மாற்றப்பட்ட பின்   தங்கள் மின்சார கட்டணத்தை செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கூட்டமைப்பினர் தெரி வித்துள்ளனர்.