தருமபுரி, ஜன.4- சோகத்தூர் ஊராட்சியை தரும புரி நகராட்சியுடன் இணைப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும், என வலியுறுத்தி ஊரக வேலைத் திட்ட தொழிலாளர்கள் சாலை மறிய லில் ஈடுபட்டனர். தருமபுரி நகராட்சியுடன் ஏ. ஜெட்டி அள்ளி, சோகத்தூர், இலக் கியம்பட்டி, தடங்கம், தோக்கம் பட்டி உள்ளிட்ட 20 மேற்பட்ட ஊராட்சிகளை இணைக்கவுள்ள தாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித் தது. இந்நிலையில், சோகத்தூர் ஊராட்சிக்குட்பட்ட சவுளுபட்டி, பூசாரிப்பட்டி, மாட்டுக்கானூர், பச்சி னம்பட்டி, ஆட்டுக்காரன்பட்டி உள் ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 200க் கும் மேற்பட்ட, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தங்களது ஊராட்சியை நகராட்சியு டன் இணைத்தால் சுமார் 2 ஆயிரத் திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ் நிலை ஏற்படும். எனவே, இம்மு டிவை தமிழக அரசு கைவிட வேண் டும் என வலியுறுத்தி, தருமபுரி - பென்னாகரம் நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையி னர் மற்றும் வருவாய்த்துறையினர், போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறு தியளித்தனர். அதன்பேரில் போராட்டத்தை கைவிட்டு அனைவ ரும் கலைந்து சென்றனர். அதேபோல், எர்ரப்பட்டி ஊராட் சியில் உள்ள செட்டியூர் ஒட்டப்பட்டி கோடியூர் உள்ளிட்ட கிராமங்க ளைச் சேர்ந்த பொதுமக்கள் சனி யன்று, எ சிறப்பு கிராம சபை கூட் டம் நடத்தி, தங்களது ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.