districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சுற்றுலா வேன் கவிழ்ந்து 8 பேர் காயம்

நாமக்கல், ஆக.28- சேந்தமங்கலம் அருகே சேலம் நோக்கி சென்று கொண்டி ருந்த சுற்றுலா வேன் கவிழ்ந்து, 8 பேர் படுகாயமடைந்தனர். நாமக்கல் மாவட்டம், கொண்டிசெட்டிப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ், ஜீவா, ரத்தினம், சங்கீதா, மது, ரம்யா ஆகியோர் நட னக்குழு ஒன்றை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம், ஆத்தூரில் நிகழ்ச்சி நடத்துவதற்காக ஒரு சுற்றுலா வேனில் இவர்கள் அனைவரும் சென்று கொண்டிருந்தனர். அந்த வேனை சேலத்தைச் சேர்ந்த ராகேஷ் என்பவர் ஓட்டிச் சென் றார். சேந்தமங்கலம் வழியாக அந்த சுற்றுலா வேன் காந்தி புரம் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென வேனின் டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்தது. அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவ்வழியாக சென்றவர்கள்  சேந்தமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சேந்தமங்கலம் போலீசார், காயமடைந்த 8 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக நாமக் கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த னர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிரானைட் குவாரிக்கு விவசாயிகள் எதிர்ப்பு

ஈரோடு, ஆக.28- ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் திங்களன்று நடைபெற்ற குறைதீர் கூட் டத்தில், நம்பியூர் தாலுகாவிற்குட்பட்ட மாரம் பாளையம், மாரம்பாளையம் புதுார், வகுத்து கவுண்டன் புதுார், நடுப்பாளையம், கொமார பாளையம், வடுகபாளையம், காராப்பாடி  உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மனு அளித்தனர். அம்மனுவில், நம்பியூர் வட் டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயி கள், விளை நிலங்கள் வைத்து விவசாயம் செய்கிறோம். கால்நடை வளர்ப்பும், பால்  உற்பத்தியும் உள்ளது. காராப்பாடி கிராமத் தில், 80 ஏக்கரில் கிரானைட் கல் உள்ளதாக வும், அதனை வெட்டி எடுக்க உரிமம் பெறவும் சிலர் முயன்றனர். இப்பகுதியில் உள்ள நீர்  வழிப்பாதை, குளம், குட்டைகள் வறண்டு விடும். அதனால் விவசாயமும், கால்நடை வளர்ப்பும் பாதிக்கும். ஏற்கனவே அரசு அனு மதி பெற்று இயங்கும் கிரானைட் நிறுவனங் கள், அளவுக்கு அதிகமாக கிரானைட் வெட்டி  எடுப்பதுடன், அனுமதி பெறாத இடங்களில் குவாரி அமைக்கின்றனர். இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாய சூழல் உருவா கும். எனவே, மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆய்வு செய்து குவாரி, கிரானைட் கல்குவாரி  அமைக்கும் பணிக்கு தடை விதிக்க வேண் டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.500 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம்

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு
சேலம், ஆக.28- சேலம் மண்டலத்திற்கு நடப்பு நிதியாண் டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறு வனங்களுக்கு கடன் பட்டுவாடா தொகை யாக ரூ.500 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட் டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் சிறு,  குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக் கான கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியர் செ.கார் மேகம் முன்னிலையில் நடைபெற்றது. தமிழ் நாடு முதலீட்டுக் கழக கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா வகித்து பேசு கையில், புதிதாக தொழில் தொடங்கும் மற் றும் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் விரிவாக்கம் செய்யவும் பல்வேறு வகை யான கடனுதவித் திட்டங்கள் மூலம் ரூ.40 கோடி வரை காலக்கடன் மற்றும் அரசின் மானியமாக ரூ.1.50 கோடி வரை வழங்கப்படு கிறது. ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழில் விரிவாக்கத் திட்டத்திற்கு 5 சதவிகித வட்டி மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியர் என்ற முறையில் சேலம் மாவட்ட மானது தொழில் முனைவோருக்கு நில அமை விட அடிப்படையில் சிறப்பான அமைவிடமா கவும், எதிர்கால தொழில் முன்னேற்றத்திற்கு உகந்த இடமாகவும் திகழும். மேலும், சேலம் மாவட்டத்தில் காணப்படும் மூலப்பொருட் களின் மதிப்பை அறிந்துகொண்டு தொழில் முனைவோர் உரிய தொழிலைத் தொடங்கி முன்னேற்றம் அடைய வேண்டும், என்றார். இதன்பின் மண்டல வணிக வளர்ச்சி மேலாளர் தி.மோகன் பேசுகையில், சேலம்  மாவட்டத்தில் ஆக.21 முதல் செப்.1 ஆம் தேதி வரை நடைபெற்று வரும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான சிறப்பு  கடன் முகாமில், தற்பொழுது வரை ரூ.100 கோடி அளவிற்கு கடனுதவி கோரி 40 விண் ணப்பங்கள் தொழில் முனைவோரிடமிருந்து பெறப்பட்டுள்ளது. செப்.1 ஆம் தேதி வரை நடைபெறும் இம்முகாமில் தொழில் முனை வோர்கள் மனுக்களை தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் கிளை அலுவலகங் களான சேலம் மண்டலம், தருமபுரி, சேலம் மற்றும் ஒசூர் ஆகிய இடங்களில் வழங்கிப் பயன்பெறலாம். மேலும், சேலம் மண்டலத் திற்கு நடப்பு நிதியாண்டிற்கு சிறு, குறு மற்றும்  நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் பட்டுவாடா தொகையாக ரூ.500 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, என்றார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலு வலர் பெ.மேனகா, உதவி ஆட்சியர் (பயிற்சி)  தி.சுவாதி ஸ்ரீ, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக மண்டல மேலாளர் ராஜூ, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் டி.சிவ குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவரசு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் சங்க தலைவர் எஸ்.கோவிந்தன் உட்பட 300க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் கள் கலந்து கொண்டனர்.

கண்டியன்கோயில் பகுதியில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க கோரிக்கை

திருப்பூர், ஆக.28 – திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியம் கண்டியன் கோயில் பகுதியில் நிறுத்தப்பட்ட வழித்தடப் பேருந்து களை இயக்குமாறு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சி யரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி, கருங்காளிபாளையம் பாலு ஆகியோர் திங்களன்று ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:  சம்மந்தம்பாளையம், பொன்னங்காளிவலசு, மேட்டுப் பாறை, மருதுறையன் வலசு, ஆரியப்பட்டி, கண்டியன் கோயில், வலுப்பூர் அம்மன் கோவில் ஆகிய கிராமங்கள் வழி யாக சுற்றி பல்வேறு கூலித் தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி  மாணவர்கள், அரசுப் பேருந்தை பயன்படுத்தி வந்தனர். காங்கேயம் கிளையைச் சேர்ந்த அரசு நகரப் பேருந்து கே10, கே7, கே11 ஆகிய பேருந்துகள் கிட்டத்தட்ட 30 ஆண்டு களாக மேற்கண்ட வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் காலை 11.15 மணிக்கும், இரவு 7.45 மணிக்கும் இயக் கப்பட்ட இரு தனி நடைகளை காங்கேயம் கிளை அதிகாரி கள் பேருந்துகளை இயக்காமல் துண்டிப்பு செய்துள்ளனர். காலையில் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு வரும் போதும், நியாயவிலைக் கடைக்குச் சென்றுவிட்டு திரும்பு வதற்கும் பேருந்து இல்லாமல் வயதான பெண்கள் சிரமப்ப டுகின்றனர். இரவு காங்கேயம் நகரத்தில் இருந்து பணி முடிந்து  வீடு திரும்பும்போது மேற்கண்ட நேரத்தில் பேருந்து இல்லா மல் வயதானவர்களும் பெண்களும் சிரமப்படுகின்றனர்.இந்த வழித்தடத்தில் தனியார் பேருந்து சென்று வந்தது.  தற்போது அதையும் நிறுத்திவிட்டனர். மேற்படி காலை 11.15  மணி, இரவு 7.45 மணி ஆகிய நிறுத்தப்பட்ட பேருந்துகளை பொது மக்கள் மற்றும் கூலித் தொழிலாளர், பெண்கள் நலன்  கருதி உடனடியாக இயக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

ஏசி, பிரிட்ஜ் பழுது பார்க்கும்  இலவச பயிற்சியில் சேர அழைப்பு

திருப்பூர், ஆக. 28 - திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் உள்ள கனரா வங்கி யின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் “இலவச ஏசி, ப்ரிட்ஜ் பழுதுபார்ப்பு மற்றும் சர்வீசிங் பயிற்சி”  30 நாள் முழு நேரப் பயிற்சி அளிக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிரா மங்களில் வசிக்கும் வறுமைக் கோட்டிற்கு கீழ்வாழும் மக்க ளுக்கு இப்பயிற்சிகளைக் கற்றுக் கொள்ள பயிற்சியாளர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. எழுத படிக்க தெரிந்த, 18  முதல் 45 வயதுக்கு உட்பட்ட, ஆண், பெண் இருபாலரும் விண் ணப்பிக்கலாம். பயிற்சிக்கு எவ்விதக் கட்டணமும் செலுத்த  வேண்டியதில்லை. காலை, மாலை தேநீர் மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்ப டும். பயிற்சிக்கு பிறகு தொழில் தொடங்க கடன் ஆலோசனை கள் வழங்கப்படும். பயிற்சிக்கு விண்ணப்பிக்க “கனரா வங்கி  கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், மாவட்ட  தொழில் மையம் எதிரில்,, அவிநாசி சாலை, அனுப்பர்பா ளையம் புதூர், திருப்பூர் -641652” என்ற முகவரிக்கு நேரில்  வர வேண்டும். “முதலில் வருவோர்க்கு முன்னுரிமை வழங் கப்படும்”. மேலும் விவரங்களுக்கு தொலைபேசி: 9489043923,  9952518441, 8610533436 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ள லாம். இந்த தகவலை, பயிற்சி நிலைய இயக்குனர் சதீஷ் குமார்  தெரிவித்துள்ளார்.

ரூ.3.77 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

அவிநாசி, ஆக.28- அவிநாசி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் திங்கள்கி ழமை நடைபெற்ற ஏலத்தில்  ரூ.3.77 லட்சத்துக்கு வர்த்தகம்  நடைபெற்றது. இதில் குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.7,800 முதல் ரூ.7,850 வரையிலும், இரண்டாம் ரக நிலக்க டலை ரூ.7,700 முதல் ரூ.7,800 வரையிலும், மூன்றாம் ரக  நிலக்கடலை ரூ.7,600 முதல் ரூ.7,650 வரையிலும், பச்சை நிலக்கடலை ரூ.5,000 முதல் ரூ.5,500 வரையிலும் ஏலம்  போனது. மொத்தம் ரூ.3.77 லட்சத்துக்கு ஏலம் நடைபெற் றது.

பல் மருத்துவர்களை நியமித்திடுக

ஈரோடு, ஆக.28- ஈரோடு மாவட்ட அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகா தார நிலையங்களில் பல் மருத்துவர்களை நியமிக்க சிறு பான்மையின கூட்டமைப்பினர் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், அரசு  ஆரம்ப சுகாதார நிலையங்களில் பெரும்பாலான இடங்களில் பல் மருத்துவத்திற்கான கட்டமைப்பு உள்ளது. ஆனால் பல் மருத்துவர்கள் இல்லை. குறிப்பாக, புளியம்பட்டியில், 8 ஆண் டாகவும், உக்கரம், குருவரெட்டியூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல் டாக்டர்கள் நியமிக்கப்பட வேயில்லை. ஏழை, எளியவர்கள், பள்ளி குழந்தைகள், முதியோர்கள் என பலரும் பல் வலி, சொத்தைப்பல் உள்ளிட்ட பிரச்சனை களுக்கு சிகிச்சை கிடைப்பதில்லை. தனியார் பல் மருத்து வர்களிடம் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனை கள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பல் டாக்டர்களை நியமித்து சிகிச்சை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அதிக வட்டி கேட்டு கொலை மிரட்டல் பெண் ஒருவர் தற்கொலை முயற்சி

சேலம், ஆக.28- வாங்கிய கடனுக்கு அதிக பணம் செலுத்தச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்து வரும் நிதி நிறுவனம் மீது  நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீ குளிக்க முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சேலம் நான்கு ரோடு பகுதி கல்லாங்குத்து புதூர் பகு தியைச் சேர்ந்தவர் கமலா அவரது கணவர் அறிவுமணி  ஆகியோர் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது மறைத்து வைத்திருந்தார் மண் ணெண்ணெய் கேனை எடுத்து பெண்  தீக்குளிக்க முயற்சி செய்தார். இதைக்கண்டு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இது குறித்து அவர்கள் கூறுகையில், கல்லாங்குத்து புதூர் பகுதியில் 250 சதுர அடி நிலப்பரப்பில் வீடு கட்டுவதற்காக தனி யார் நிதி நிறுவனத்தின் 5. 93 லட்சம் கடனாக பெற்றேன். இது வரை 5 லட்சம் ரூபாய் வரை கட்டி விட்டேன். மேலும், 7.20  லட்சம் இன்னும் கட்ட வேண்டும் என்கிறார்கள். நான் வாங்கிய  கடனை முழுவதும் கட்டி விடுகிறேன் எனக் கூறிய போது அசல் வட்டியும் சேர்த்து இன்னும் 7.20 லட்சம் ரூபாய் கட்டவில்லை  என்றால் வீட்டை விட்டு வெளியேற்றி கொலை செய்து விடு வோம் என அடியாட்களை வைத்து மிரட்டினர். இதனால் தற் கொலைக்கு முயன்றதாக தெரிவித்தனர். இதனையடுத்து, காவல்துறையினர் நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

குடிநீர் தொட்டிகள் அமைக்கும் பணி 

தருமபுரி, ஆக.28- தருமபுரி ஒன்றியம், இலக்கியம்பட்டி ஊராட்சியில் ரூ.73 லட்சத்தில் 6 இடத்தில் குடிநீர் தொட்டிகள் அமைக்கும் பணி துவங்கப்பட்டது.  தருமபுரி ஒன்றியம், இலக்கியம்பட்டி ஊராட்சியில் 15  ஆவது நிதிக் குழுவில் ரூ.73 லட்சம் மதிப்பீட்டில் வெண் ணாம்பட்டி டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரு, சக்திவான் நகர்,  நந்திநகர், இலக்கியம்பட்டி, மங்கம்மாள் தெரு ஆகிய 6   இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் துவங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு, இலக்கியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சுதா ரமேஷ் தலைமை வகித்தார். குடிநீர்தொட்டி அமைக்கும் பணியை முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும், தருமபுரி கிழக்கு திமுக மாவட்டச் செயலாளர் தடங்கம்.பெ.சுப்ரமணி தொடங்கி வைத்தார். இதில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வித்யா வெங்கடா சலம்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நூறு நாள் வேலை கேட்டு மனு


ஈரோடு, ஆக.28- வேலை அட்டை பெற்ற விவசாய தொழிலாளர்களுக்கு 100 நாட்களும் வேலையளிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கராவிடம் மனு அளிக்கப் பட்டது. ஈரோடு மாவட்டம், எக்கட்டாம்பாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட  பயனாளிகள் பலர் உள்ளனர். இவர்களுக்கு முறையாக பணி வழங்கவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித் துள்ளனர். அப்புகாரில், வேலை அடையாள அட்டை பெற்ற  ஒரு தொழிலாளிக்கு 45 முதல் 55 நாட்களே பணி வழங்கப் பட்டுள்ளது. ஒரே குடும்பத்தில் 2 உறுப்பினர் இருந்தால் ஆளுக்கு, 20 முதல் 25 நாட்களே பணி வழங்கப்படுகிறது. கோடை வறட்சி நீண்டுள்ளதால், 100 நாள் வேலை திட்டப் பணிளைத் தவிர, விவசாய பணி உட்பட வேறு பணிகள் எதுவும் இல்லை. இதனால் பலருக்கு வேலை கிடைக்கா மல் சிரமப்படும் நிலை உள்ளது. இந்த ஆண்டில் இன்னும் 6  மாதங்களே உள்ள நிலையில், அனைவருக்கும் தலா 150  நாட்கள் பணி கிடைக்கும் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இன்று விடுமுறை

கோவை, ஆக.28- ஓணம் பண்டிகையை யொட்டி, கேரள மாநிலத்தை  ஒட்டியுள்ள கோவை மாவட் டத்திலுள்ள பள்ளி, கல்லூரி கள், தனியார் நிறுவனங்க ளில், கடந்த பத்து நாள்களா கவே கொண்டாட்டம் களை கட்டி வருகிறது. இந்நிலை யில், கோவை மாவட்ட ஆட்சி யர் கிராந்திகுமார் பாடி அறி விப்பு ஒன்றை வெளியிட்டுள் ளார். அதில், செவ்வாயன்று (இன்று) ஓணம் பண்டிகை யையொட்டி கோவை மாவட் டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுவதாக தெரி விக்கப்பட்டுள்ளது.