தருமபுரி, ஆக.3- 43 வருடமாக ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்று, சொந்த ஊருக்கு திரும்பிய வீரருக்கு கிராமமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள செலந்தி னஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பரசுராமன் (60). இவர் இந்திய எல்லை பாதுகாப்புப்படையில் 43 வருடங்களாக பணி யாற்றி கடந்த ஜூலை 31 ஆம் தேதியன்று ஓய்வுபெற்றார். இவர் இந்திய எல்லை பாதுகாப்பு படையில் கான்டபிளாக பஞ்சாப் பில் பணியில் சேர்ந்து, தற்போது அதேபிரிவில் காவல் உதவி ஆய்வாளராக மிசோரமில் பணியாற்றி ஓய்வு பெற்றார். இந்நி லையில், சொந்த கிராமத்திற்கு சனியன்று வந்த அவ ருக்கு பாலக்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ.மாதப்பன், திமுக மாநில விவசாய அணி துணைச்செ யலாளர் சுப்பிரமணி, ஊர் பொதுமக்கள் மற்றும் உற வினர்கள் அனைவரும் ஒன்று கூடி, ஆராத்தி எடுத்தும், பட்டா சுகள் வெடித்தும், மாலை அணிவித்து மரியாதை செய்து ஊருக்குள் வரவேற்றனர். அதன்பின் ஊருக்குள் அமைத் திருந்த வரவேற்பு மேடையில் ராணுவ வீரர் பரசுராமன், சுதந்திர போராட்ட வீரர்களான நேதாஜி மற்றும் காந்திஜி படங் களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். ஓய்வுபெற்ற ராணுவ வீரரை, ஒரு கிராமமே திரண்டு வரவேற்ற நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.