districts

img

தீக்கிரையான கரும்பு தோட்டம்

தருமபுரி, பிப்.25- பொம்மிடி அருகே மின்கசிவு ஏற்பட்டதால் 5 ஏக்கர்  கரும்பு தோட்டம் தீக்கிரையாகிய சம்பவம் விவசாயிகளி டையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள சாய் நகர்  பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி விஜயகுமார் (60). இவருக்கு  சொந்தமான விவசாய நிலம் சுமார் 5 ஏக்கர் உள்ளது. இதில்  முழுவதும் கரும்பு பயிரிட்டு சில தினங்களில் கரும்பு வெட்டி  அரவைக்கு ஆலைக்கு அனுப்பும் நிலையில் இருந்தது. இந்நிலையில், கிணற்றில் உள்ள மின் மோட்டார் பழுதான தால் அதை சரி செய்வதற்காக பழுது பார்த்துக்கொண்டிருந்த  போது திடீரென மின்கசிவு ஏற்பட்டு அருகிலிருந்த காய்ந்த  சருகுகள் தீப்பிடித்து எரிய தொடங்கியது. அவற்றை அணைப் பதற்கு முயற்சிப்பதற்குள் காற்று வேகமாக வீசியதால் தீ  பரவி 5 ஏக்கர் கரும்பு தோட்டம் முழுவதும் எரிந்து சாம்ப லானது. தீயை அணைப்பதற்காக தோட்டத்தின் உரிமை யாளர்களும், அக்கம் பக்கத்தினரும் தீவிர முயற்சி மேற் கொண்டு கிணற்றில் இருந்தும், தொட்டியில் உள்ள தண் ணீரை பாத்திரத்தில் பிடித்து வந்தும் கரும்பு பயிர் மீது  தெளித்து தீயை கட்டுப்படுத்த பல மணி நேரம் முயற்சித் தனர். அதேமசயம் தீயணைப்பு நிலையத்திற்கு தொடர்பு கொண்ட போது தீயணைப்பு நிலைய வாகனம் வேறு பணிக்கு  சென்று விட்டதால், தீயணைப்பு வாகனம் வரவில்லை. இத னால் தோட்டம் முழுவதுமாக தீப்பற்றி எரிந்து நாசமானது.  இதன் மதிப்பு சுமார் ரூ.4.50 லட்சம் இருக்கும் என கூறப் படுகிறது. இச்சம்பவம் குறித்து பொம்மிடி காவல் துறையினர்,  பொ.மல்லாபுரம் கிராம வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.