உடுமலை, செப்.9- உடுமலை நகராட்சி சார்பில் விடப்படும் ஒப்பந்தப் புள்ளி (டெண் டர்) யாருக்கும் தெரியாமல் ரகசி யமாக நடைபெறுகிறது. இதில், வெளிப்படை தன்மை வேண்டும் என திங்கட்கிழமை நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் பேசியது பரப ரப்பை ஏற்படுத்தியது. உடுமலை நகரமன்றத் தலைவர் மத்தீன் தலைமையில் திங்களன்று நகரமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில், வளர்ச்சி திட்டங்கள் மற் றும் இதர வேலைகளுக்கு பல ஆண் டுகளாக ஒரு சில நபர்கள் மட்டுமே வேலை செய்வது ஏன்? புதிய ஆட்க ளுக்கு வேலைகளை தர மறுப்பதற் கான காரணம் குறித்து விளக்கம் தர வேண்டும். அனைத்து வேலைக ளுக்கும் புதிய ஒப்பந்தப் புள்ளி வெளிப்படையான முறையில் நடத்த வேண்டும். நகராட்சியில் நடைபெறும் பணிகள் குறித்து நகர மன்ற உறுப்பினர்களுக்கு தெரிவது இல்லை என உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். மேலும், நகராட்சி நிர்வாகத் திற்கு சொந்தமான கடைகளின் வாடகை தனியார் வணிக நிறுவ னங்களை விட பல மடங்கு அதிக மாக உள்ளது. நகராட்சி கடைகள் பாதிக்கு மேல் பூட்டியே உள்ளன. இதனால் நகராட்சிக்கு ரூபாய். 7 கோடிக்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வரும் ஆண்டுக ளில் இதை தவிர்க்கும் வகையில் அனைவருக்கும் கட்டுபடியான வாடகையை நிர்ணயம் செய்ய வேண்டும். வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள சாலைகளில் சரக்கு வாகனங்கள் வருவதால் போக்குவ ரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையில் முக்கிய வீதிக ளில் சரக்கு வாகனம் பொருட்கள் இறக்கவும், ஏற்றவும் நேர கட்டுப் பாடு விதிக்க வேண்டும். பொது மக் கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தெரு நாய் களை கட்டுப்படுத்த வேண்டும். வார்டு பகுதிகளில் மாதம் ஒருமுறை நடைபெறும் மாஸ் கிளினிங் என்பது வெறும் கண்துடைப்பாக உள்ளது. இதனால் எந்த பயனும் இல்லை. நகரை சுத்தமாகவும், சுகாதாரமா கவும் வைத்துக் கொள்ளும் வகை யில் தினமும் குப்பைகள் மற்றும் சாக்கடைகளை சுத்தம் செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும். சாலைகளில் விபத்துகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது, பாதாள சாக்கடை திட்ட குழிகள் தான். சாக்கடைகளை சுத்தம் செய்த பின்னர் மேல் தொட்டி சாலைகளின் கீழ் சென்று விடுகி றது. மேலும், இந்த குழிகளை மூடா மல் செல்வதால் உடுமலை பகுதி யில் அதிக விபத்துகள் ஏற்படுகி றது. இதை தடுக்கும் வகையில் பணி கள் முடித்தவுடன் சிமெண்ட் கல வைகள் கொண்டு பாதாள சாக் கடை குழிகளை மூட வேண்டும் என்று பேசினர். மேலும் சில பகுதிகளில் தெரு விளக்குகள் வெளிச்சம் இல்லா மல் உள்ளதாகவும், ஆனால் அதே உடுமலை நகரில் வசதி படைத்த வர்கள் வசிக்கும் சில பகுதிகளில் அதிக வெளிச்சம் இருக்கும் மின் விளக்குகள் உள்ளன. இந்த பார பட்சம் இல்லாமல் அனைத்து பகுதி களுக்கும் ஒரே மாதிரியான மின் விளக்குகளை அமைக்க வேண்டும் என்று நகர்மன்ற உறுப்பினர்கள் பேசினார்கள். இதையடுத்து நகர்மன்றத்தில் மொத்தமாக 135 தீர்மானத்தில் 134 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. 52 ஆவது தீர்மானமாக நக ராட்சியின் பழைய குப்பை கிடங்கை தனியார் நிறுவனத்திற்கு மாத வாடகைக்கு விடும் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.
பெருச்சாளிகளை பிடிக்க டெண்டர் விட வேண்டும்
நகராட்சியில் குறுகலான பாதைகளில் கற்கள் (பேவர் பிளாக்) பதிக் கும் பணிகளுக்கு புதிய ஒப்பந்தம் தேர்வு செய்யும் தீர்மானத்தின் மீது திமுக உறுப்பினர் ஜெயகுமார் பேசுகையில், கற்கள் ஐந்து ஆண்டுக ளுக்கு மேல் நீடிக்கும் என்கிறீர்கள். ஆனால், கடந்த ஆண்டு போடப்பட்ட பாதையில் மீண்டும் கற்கள் பதிக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டுள் ளது ஏன் என்று கேள்வி எழுப்பினார். இந்த பாதைகளை பெருச்சாளி கள் சேதப்படுத்தியதால் மீண்டும் பாதை அமைக்கப்படுகிறது என்று பதில் அளிக்கப்பட்டது. இதற்கு நகரமன்ற உறுப்பினர் கிண்டலாக உடு மலை நகராட்சி முழுவதும் பெருச்சாளிகளை பிடிக்க ஏன் டெண்டர் விடக் கூடாது என்று காட்டமாக பேசினார். பின்னர் நகராட்சியில் செய்யும் பணி கள் தரம் இல்லாததை மறைக்க பெருச்சாளிகள் தான் காரணம் என சொல்வதை ஏற்க முடியாது என கடுமையாக பேசினார்.