கோவை, அக்.11- அன்னூர் அருகே 3 மணி நேரம் தொடர்ந்து கராத்தே செய்த மாணவர்களின் சாதனை முயற்சி பார்வை யாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. கோவை மாவட்டம், கோவில்பாளையத்தில் தனி யார் கராத்தே கிளப் சார்பில் 75 ஆவது ஆண்டு சுதந்திர தின விழா கொண் டாட்டத்தை முன்னிட்டு 3 மணி நேரம் தொடர்ந்து இடைவிடாது கராத்தே கட்டா செய்யும் புதிய சாதனை முயற்சி நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்ச் சியில் 3 வயது முதல் 21 வயது வரையிலான கராத்தே பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 50 பேர் கலந்து கொண்டு 3 மணி நேரம் தொடர்ந்து கராத்தே கட்டா செய்தனர். மாணவர்களின் இந்த முயற்சி பார்வையாளர்களை வெகுவா கக் கவர்ந்தது. இதில், கோவில்பாளையம் காவல் ஆய்வாளர் சிவகுமார் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற் றும் கோப்பைகள் வழங்கி பாராட்டி பேசி னார். இதன்பின் மாணவ, மாணவிகளுக்கும், பெற்றோர்களுக்கும், மரக்கன்றுகள் இலவச மாக வழங்கப்பட்டன.