திருப்பூர், ஜன.21 - திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட மாண வர் அரவிந்தன் சென்னையில் நடைபெ றும் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டுள் ளார். திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி துவங்கி 56 வருடங்கள் ஆகி றது. கடந்த காலத்தில் நாட்டு நலப்பணித் திட்டத்தில் இருந்து யாரும் புதுதில்லி மற்றும் சென்னையில் நடைபெறும் குடி யரசு தின அணிவகுப்பிற்கு தேர்வாக வில்லை. ஆனால் தற்போது தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக நாட்டு நலப் பணித் திட்டம் அலகு -2 இல் இருந்து மாணவர்கள் குடிய ரசு தின அணிவகுப் பில் கலந்து கொள்ள தேர்வாகி வருகிறார்கள். முதல் இரண்டு வருடங்கள் புது டில்லியில் நடைபெ றும் அணிவகுப் பில் கலந்து கொண் டார்கள். இந்த வருடம் 2023 சென்னை யில் நடைபெறும் குடியரசு தின அணி வகுப்பில் நாட்டு நலப்பணித் திட்டம் சார் பாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலை கழகத்திற்கு கீழ் உள்ள கல் லூரிகளில் இருந்து 120 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பாரதியார் பல் கலைக் கழகத்திலிருந்து 9 மாணவர் கள் கலந்து கொள்கிறார்கள். அதில் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 மாணவன் அரவிந்தன் (மூன்றாமாண்டு விலங்கியல்) தேர்வாகி உள்ளார். இது ஹாட்ரிக் சாதனையாக உள் ளது. மேலும் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தேர்வான ஒரே அரசு கல் லூரி மாணவர் இவர் என்பது குறிப்பி டத்தக்கது. இவரை கல்லூரி முதல் வர் கிருஷ்ணன், அலகு -2 ஒருங்கிணைப் பாளர் மோகன்குமார், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வழியனுப்பி வைத் தனர்.