districts

img

பாலஸ்தீனம் மீது இனப்படுகொலை யுத்தம் இஸ்ரேலை கண்டித்து தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர், நவ.1- பாலஸ்தீன மக்கள் மீது இனப்படுகொலை நோக்கத்து டன், இஸ்ரேல் நடத்தும் கொடூர போர்த் தாக்குதலைக் கண் டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனை பிரச்சார இயக்கம் நடைபெற்றது. ஐக்கிய நாடுகள் சபை உடனடியாகத் தலையிட்டு, பாலஸ் தீனம் மீது இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும். சுதந்திர பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க வேண்டும். பாலஸ்தீன மக்களுக்கான மனிதாபிமான உதவி களை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 15.வேலம்பாளையம் நகரக்குழு சார்பில்  திங்களன்று மாலை தெருமுனைப் பிரச்சார இயக்கம் நடை பெற்றது. பெரியார் காலனி வாரச்சந்தை அருகே நடை பெற்ற இக்கூட்டத்திற்கு கட்சியின் நகரக்குழு உறுப்பினர் பி.பாபு தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராஜகோபால், நகரச்செயலாளர் ச.நந்தகோபால், நகரக் குழு உறுப்பினர் ஆர்.சுகுமார் கண்டன உரையாற்றினர். இதில் நகரக்குழு உறுப்பினர்கள் அ.உமாநாத், பி.சின்னச்சாமி, பி. நவபாலன், கிளைச் செயலாளர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில், நகரக்குழு உறுப்பினர் ர. கவிதா நன்றி கூறினார்.