உடுமலை, மார்ச் 25- உடுமலை நகராட்சியில் சாலை ஓரங்களில் மழைநீர் வடிகால் கால்வாய் களில், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீடுகளின் கழிவுநீர் செல்வதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட் டுள்ளது. உடுமலை நகராட்சியில் சுமார் ரூ.10 கோடி மதிப்பில் நகரின் அனைத்து வார் டுகள் இருக்கும் சாலைகளின் ஓரங்க ளில் மழைநீர் வடிகால் கால்வாய்கள் கட் டப்பட்டன. பாதாளச் சாக்கடை கட்டும் திட்டத்தில் குளறுபடி ஏற்பட்டதால் பல வணிக நிறுவனங்களின் கழிவு நீர், மழை நீர் வடிகால் கால்வாய்களில் செல்கி றது. இதனால் பல கோடி செலவில் கட்டப்பட்ட மழைநீர் வடிகால் கால்வாய் கள் பாதாளச் சாக்கடையாக மறியுள் ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில், உடுமலை நகராட் சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். கடந்த 2013 ஆம் ஆண்டு நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ரூ.56.07 கோடி மதிப்பில் நகர்ப்ப குதி முழுவதும் சுமார் 97 கிலோ மீட்டர் நீளத்தில் 3,900 இறங்கு குழாய்கள் மூலம் சாக்கடை நீர் சேகரிக்கப்பட்டு, ஏரிப்பாளையம் பகுதியில் 7.81 எம்.எல்.டி திறன் கொண்ட சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டது. இந்த பாதாளச் சாக்கடை திட்டத்தில் ஏற் பட்ட குளறுபடி காரணமாகவும், நகராட் சியில் இன்று வரை பல வணிக நிறு வனங்கள் மற்றும் வீடுகளை இணைக் கப்படாமல் இருப்பாதல் தான் கழிவு நீர் மழைநீர் வடிகால் கால்வாய்களில் செல் கிறது. இதனால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.