ஆம்! நவம்பர் 27, 2022 இல் கண்களுக்கும், செவிகளுக்கும் விருந்தளிக்க காத்திருக்கிறது திருப்பூர் மாநகரம்! 105ஆவது நவம்பர் புரட்சி தினத்தை முன் னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் அன்று, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செந்தொண்டர் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள் ளது. இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன் தலைமை ஏற்க, அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் பங்கேற்று செந்தொண்டர் பேரணி பொதுக்கூட்ட நிகழ்வில் தீக்கதிர் நாளேட்டின் சந்தா தொகையை பெற்றுக் கொண்டு சிறப்புரை ஆற்ற இருக்கிறார். மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சுகுமாரன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாநிலக் குழு உறுப்பினர கே.காமராஜ், தீக்கதிர் முதன்மை பொதுமேலாளர் என்.பாண்டி உள்ளிட் டோர் உரையாற்ற இருக்கிறார்கள். மனிதகுலத்தின் பெருங்கனவு சோசலிசம்! மண்ணுலகில் அந்தப் பெருங்கனவை சாத்திய மாக்கியது 1917ஆம் ஆண்டு ரஷ்யாவில் மாமேதை லெனின் தலைமையில் தொழிலாளர் கள், விவசாயிகள் அணிசேர்ந்து நடத்திய சோச லிசப் புரட்சி. மனிதனை மனிதன் சுரண்டாத, ஆண், பெண் பாலின ஏற்றத்தாழ்வு,சமூக ஏற்றத்தாழ்வு இல்லாத, எல்லோருக்கும், எல்லாம் என்பதை நடைமுறைப்படுத்திக் காட்டியது. பசியில்லை, பட்டினி இல்லை. சுரண்டல் இல்லை, ஆகவே அடக்குமுறை, ஒடுக்குமுறை இல்லை. வாழ்க்கை அன்புமயமானதாக, அர்த்தமுள்ள உறவுகளுடன், மகிழ்ச்சியும் குதூகலமும், கொண்டாட்டமும் ஆக சாதித்துக் காட்டியது சோவியத் சோசலிச சமுதாயம்.
அந்த மகத்தான புரட்சிப் பெருநெருப்பு உல கில் இனி ஒருபோதும் அணையாது. இன்று உல கம் சந்திக்கும் கடும் நெருக்கடிகளுக்கும், முரண்பாடுகளுக்கும், பாசிச அச்சுறுதல்க ளுக்கும் அந்த சோசலிசப்புரட்சிப் பாதையே முற்றுப்புள்ளி வைத்து மனிதகுலத்தை மீட்க முடியும்! ஆகவேதான் உலகம் முழுவதும் கம்யூனிஸ்டுகள், முற்போக்காளர்கள் நவம்பர் புரட்சி தினத்தை பேரெழுச்சியோடு கொண்டாடி வருகின்றனர். அதன்படிதான், திருப்பூர் மாவட்டத்தில் மார்க் சிஸ்ட் கட்சி அணிகள் முழுவதும் புரட்சி தினத்தை கொண்டாட களம் இறங்கி உள்ளது. வங்கக் கட லில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானால் லேசான மழை பொழிய துவங்குவது போல, நோட்டீஸ், போஸ்டர், சுவர் விளம்பரம், தன் குடும்ப விழாவில் கலந்து கொள்ள மாவட்ட செய லாளர் எழுதிய அழைப்பு மடல் என விளம்பர பணி கள் மாவட்டம் முழுவதும் மாநகரம் முதல் மலை கிராமம் வரை நடைபெற்றுள்ளது. இது புயலாக மாறும்போது திருப்பூர் நகரம் முழுவதும் செம்மயமாய் காட்சியளிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது. ஆயிரக்கணக் கான கொடிகள் நகரம் முழுவதும் கட்டப்பட்டுள் ள்ளது. அத்தனை கிளைகளிலும் தட்டிகள் வைப் பது, சிவப்பு சீருடையுடன் குடும்பம், குடும்பமாக பங்கேற்பது, அதற்கான வாகன ஏற்பாடுகள் என புயல் காற்று பலமடைந்துள்ளது. இதோடு கட்சியின் ஆயுதமான தீக்கதிர் நாளி தழ் ஆண்டு சந்தா பணியும் நடைபெற்று வருகி றது. தொடர்ந்து 24 வருடங்களாக, தீக்கதிர் எண்ணிக்கையில் மாநிலத்திலேயே திருப்பூர் முதல் இடத்தில் உள்ளது. இதை ஒருநாளும் யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என்ற உணர்வுடன் இவ்வருட மும் நிர்ணயித்த இலக்கை அடைய, மாநிலக்குழு உறுப்பினர் துவங்கி, மாவட்டச் செயலாளர், மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள், இடைக்கமிட்டி செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள் என அனைவரும் களத்தில் தேனீக்களாக பணி யாற்றி கொண்டிருக்கின்றனர்.
‘கடுகு சிறுத்தாலும், காரம் குறையாது” என்பது போல சமீபத்தில் நடைபெற்ற முடிந்த உள்ளாட்சிமன்றத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காதபோதும், மக்கள் மனங்களைக் கவ ரும் வகையில் பணி தொடருகிறது. குமரி, கோவை, திருப்பூர் என சில மாவட்டங் களை குறிவைத்து பிஜேபி கால் ஊன்ற முயற்சிக் கிறது. ‘செந்தாமரை சேற்றில் முளைக்கும், ஆனால் இந்த காவித் தாமரையோ மக்களை மதரீ தியாக சாதிரீதியாக பிளவுபடுத்தி, வன்முறை யில், கலவரத்தில் வளரத் துடிக்கிறது. இந்த பிஜே பியை ஒருபோதும் திருப்பூர் மண்ணில் அனும திக்க மாட்டோம் என சூளுரைக்கிற பேரணியாக நடைபெற உள்ளது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ரத்தம் சிந்தி, உயிர் தியாகம் செய்த கொடி காத்த குமரன் துவங்கி,சங்கம் வளர்த்ததற்காக படுகொலை செய்யப்பட்ட தியாகிகள் ஆசர் மில் பழனிச்சாமி, சீராணம்பாளையம் பழனிச்சாமி, வெள்ளியம் பாளையம் தியாகி ஈஸ்வரன், கேத்தம்பாளை யம் பன்னீர்செல்வம், ஏழை எளிய மக்களின் நல னுக்காக போராடி உயிர் தியாகம் செய்த தோழர் கே.ரத்தினசாமி என செங்கொடி காத்த புதல்வர் கள் தியாகத்தால் சிவந்த மண் திருப்பூர். இதை ஒரு போதும் காவிமயமாக விட மாட்டோம், என கங்க ணம் கட்டி நவம்பர் 27 செந்தொண்டர் பேரணிக்கு தயாராகி இருக்கிறது உழைக்கும் மக்களின் முத் திரை நகரம் திருப்பூர். புயல் கரையைக் கடக்கும்போது ஏராளமான பேரழிவுகளை ஏற்படுத்தி, இயற்கை மனிதர் களை எச்சரிக்கை செய்கிறது. அதுபோல் இந்த செங்கொடிப் புயல் மக்களை வஞ்சிக்கும் ஆட்சி யாளர்கள், நாசகரக் கொள்கைகளை கைவி டாவிட்டால் விளைவுகளை சந்திக்க தயாராக இருங்கள் என்று எச்சரிக்கை செய்கிறது! (ந.நி)