ஈரோடு, டிச.14- மாற்றுத்திறனாளிகளுக்கு பர்கூர் உள்ளிட்ட மலை பகுதி களில் ஒருங்கிணைந்த சிறப்பு முகாம்களை நடத்த மாற்றுத் திறனாளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலு வலகத்தில் மாதாந்திர மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் செவ்வாயன்று கோட்டாட்சியர் திவ்யபிரியதர்ஷினி தலை மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கத்தின் சார்பில், பர்கூர் மற்றும் மலை பகுதிகளில் யூடிஐடி கார்டு சிறப்பு முகாம் மற்றும் ஒருங்கிணைந்த சிறப்பு முகாம்களை நடத்த வேண் டும். 100 நாள் வேலைத் திட்டத்தில் முறைப்படி தகவல் தெரிவித்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடத்த வேண்டும். சத்தியமங்கலம், ராஜநகர் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தில் 10 கிலோ மீட்டருக்கு மேலாக பணிகளை ஒதுக்கீடு செய்து வேலை தரப்படுகிறது. இதனை கைவிட்டு 2 கி.மீ தொலைவிற்குள் வேலைகளை தர வேண்டும். என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட செய லாளர் ஏ.சகாதேவன் வலியுறுத்தினார். இக்கூட்டத்தில் அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் டி. சாவித்திரி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் மாற்றுத்திறனாளி கள் பலர் கலந்து கொண்டனர்.