பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்து வரும் இஸ்ரேல் அரசை கண்டித்தும், பாலஸ்தீனத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கத்தினர் சேலம் கோட்டை மைதானத்தில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.பவித்திரன், துணைச்செயலாளர்கள் டார்வின், கீர்த்தி வாசன், துணைத்தலைவர்கள் கோகுல், அபிராமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் நவீன், வெங்கடேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.