எலும்புக்கூடு போல் உள்ள மின்கம்பம் தருமபுரி, ஜன.28- ஒட்டப்பட்டி, சத்யா நகர் பேருந்து நிறுத்தத்தில் இரண்டு மின்கம்பங் கள் எலும்புக்கூடு போன்று காட்சி யளிப்பதால், விபத்து ஏற்படும் அபா யம் ஏற்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம், நல்லம் பள்ளி ஊராட்சி ஒன்றியம், தடங்கம் ஊராட்சிக்குபட்டது ஒட்டப்பட்டி, சத்யாநகர். இப்பகுதியில் சுமார் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி தருமபுரி நகரத்தை ஒட்டிய பகுதியாகும். இங்கு நடுத்தர மற்றும் ஏழை மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இப்பகுதி பேருந்து நிறுத் தம் அருகே இரண்டு மின்கம்பங்கள் சாலையோரம் உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த மின்கம்பங் கள் தற்போது பழுதடைந்து, கம்பிகள் வெளியே தெரிகின் றன. சில நேரங்களில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பொறி பறக்கி றது. இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. எனவே, பழுதடைந்த மின்கம்பங்களை விபத்து ஏற்படும் முன்பு அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.