districts

img

இலவச வீட்டுமனை கேட்டு முற்றுகை

பள்ளிபாளையம், மே 19- இலவச வீட்டுமனை பட்டா வழங்ககோரி தமிழ்நாடு விவ சாய தொழிலாளர் சங்கத்தினர் குமாரபாளையம் வட்டாட்சி யர் அலுவகத்தை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்லக்காபாளையத்தில் விவசாய தொழி லாளர்களுக்கு வீட்டுமனை இல்லாததால், இலவச வீட்டு  மனை பட்டா வழங்க வேண்டும். இந்த தொழிலாளர்கள் கடந்த  2 ஆண்டுகளாக  பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும், அதிகாரிகளை சந்தித்து மனு வழங்கினர். ஆனால், அதிகாரிகள் இலவச வீட்டுமனை வழங்கவில்லை. இதனால் ஆவேசமடைந்த விவசாய தொழிலாளர்கள் குமாரபாளைய வட்டாட்சியர் அலுவகத்தை முற்றுகையிட்டனர்.  இதையடுத்து, பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சி.துரைசாமி, கரும்பு வெட்டும் தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் கோவிந்தசாமி, ஒன்றிய குழு உறுப்பி னர்கள் சின்னத்தாயி, செல்வம், அமராவதி, கலாமணி மற்றும் குமாரபாளையம் வட்டாட்சியர், நில ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.  இதில், வரும் ஜூன் 30ஆம் தேதிக்குள் அனைவருக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என அதிகாரிகள், தொழிற்சங்க நிர்வாகிகளிடம் உறுதி அளித்தனர். இதன்பின் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.