திருப்பூர் மாவட்டத்தில் தீக்கதிர் நாளிதழுக்கான தீவிர சந்தா சேர்க்கும் இயக்கம் துவங்கியுள்ளது. இதன்ஒருபகுதியாக தாராபுரத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தீக்கதிர் நாளிதழுக்கான இரண்டு ஆண்டு சாந்தாக்களை வழங்கினார். இந்நிகழ்வின் போது, திமுக மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் செல்வராஜ், மார்ச்சிஸ்ட் கட்சியின் தாராபுரம் தாலுகாக செயலாளர் கனகராஜ், தாலுகா குழு உறுப்பினர் ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.