districts

img

சாலை பணியாளர்கள் குடும்பத்துடன் தொடர் முழக்கம்

ஈரோடு, மே 4- நெடுஞ்சாலைத்துறை கோபி கோட்ட பொறியாளரின் விதிமீறல் நடவ டிக்கையைக் கண்டித்து. சாலை பணி யாளர்கள் குடும்பத்துடன் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒட்டுமொத்த முதுநிலை பட்டியல் வெளியிட்டதில் விதிகளைப் பின்பற்றா மல் வெளியிடப்பட்டுள்ளதைக் கண்டித் தும், முரண்பாடுள்ள முதுநிலைப்பட்டி யலை மாற்றியமைத்து வெளியிட வேண் டும். மழை கோட்டு உள்ளிட்ட பாது காப்பு உபகாரணங்கள் வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ் நாடு நெடுஞ்சாலைத்துறை சங்கத்தின்  சார்பில் கோபி நெடுஞ்சாலைத்துறை  கோட்ட பொறியாளர் அலுவலகம்  முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு கோட்டத் தலைவர் என்.முருகவேல் தலைமை வகித்தார். இப்போராட்டத்தை மாநிலத் தலைவர் எம்.பாலசுப்பிரமணி யன் தொடக்கி வைத்து உரையாற்றி னார். மாநிலச் செயலாளர் எஸ்.செந்தில் நாதன் சிறப்புரையாற்றினார்.  இதில் வருவாய்த்துறை அலுவலர் சங்க ரஜிக்குமார், அரசு ஊழியர் சங்க  மாவட்ட செயலாளர் ச.விஜயமனோ கரன் உள்ளிட்டோர் உரையாற்றினர். சங் கத்தின் பொதுச்செயலாளர் ஏ.அம்ச ராஜ் நிறைவுரையாற்றினார். முடிவில், கோட்ட பொருளாளர் எஷ்.ஜெபமாலை ராஜ் நன்றி கூறினார்.