districts

img

கோவில் சொத்துக்களை அபகரிக்கும் மதவெறி கூட்டம்

ஈரோடு, டிச. 29- கோயில் நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகள் மற்றும் குடியி ருப்போர் கோரிக்கைகளை அமல் படுத்த வேண்டும், கோவில் சொத் துக்களை அபகரிக்கும் மதவெறி கூட்டத்தின் செயல்பாடுகளை தடுக்க  வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஈரோடு காளை மாடு  சிலை அருகில் வியாழனன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. கோவில் நிலங்களில் காலம் கால மாக குத்தகை செலுத்தி சாகுபடி செய்யும் கோபிசெட்டிபாளையம் வட்டம், கணக்கம்பாளையம் விவ சாயிகளை மறு ஏலம் என்ற பெயரில்  நிலத்தை விட்டு வெளியேற்றும் நடவ டிக்கையை கைவிட வேண்டும். அவர்கள் குத்தகை உரிமை பதிவு சட்டப்படி குத்தகைதாரராக பதிவு செய்ய வேண்டும். உயர்த்தப்பட்ட வாடகையைக் குறைத்திட வேண்டும். புதிய வாடகை நிர்ண யிக்க தலைமை செயலாளர் தலை மையில் அமைக்கப்பட்ட குழுவின்  பரிந்துரைகளை வெளியிட வேண்டும். தலைமுறை தலைமுறை யாக சாகுபடி செய்து வரும் விவ சாயிகளுக்கும், குடியிருப்பவர்க ளுக்கும் அந்த நிலம் மற்றும் இடங் களுக்கு நியாயமான விலை தீர் மானித்து அவர்களுக்கு சொந்தமாக் கப்பட வேண்டும். அறநிலையத் துறையே தேவையற்றது என தவ றான பிரச்சாரங்கள் செய்து கோவி லையும், அதன் சொத்துக்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர  துடிக்கும் மதவெறி அமைப்புகளின் நடவடிக்கையை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு, வி.தட்சிணா மூர்த்தி தலைமை வகித்தார். தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செய லாளர் ஏ.எம்.முனுசாமி, பொரு ளாளர் கே.ரத்தினம் ஆகியோர் சிறப்புரையாற்றினார். சிபிஎம் நகர  செயலாளர் பி.சுந்தரராஜன் வாழ்த்தி  பேசினார். பிரபுக்குமார், வெங்கடா சலம், வெள்ளியங்கிரிநாதன், மல்லிகா மற்றும் செல்வம் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.