உதகை, மார்ச் 4- உதகை ரோஜா பூங்காவில் கோடை சீசன் தொடங்குவதற்கு முன்னரே ரோஜாப் பூக்கள் அழகாக பூத்துக் குலுங்குகின்றன. மலை மாவட்டமான நீலகிரியில் ஆண்டுந் தோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறும். இதில், சுற்றுலா பயணி களை கவரும் வகையில் பல்வேறு மலர் அலங்காரங்கள், கண்காட்சிகள் இடம் பெறு வது வழக்கம். இந்நிலையில், உதகை அரசு பூங்காவில் ரோஜா செடிகள் நன்றாக செழித்து வளர்வதற்காக கவாத்து பணி நடை பெற்று உள்ளது. இந்த பூங்காவில் 4,201 ரகங்களை சேர்ந்த 31,500 வீரிய ரக ரோஜா செடிகள் பராமரிக் கப்பட்டு வருகிறது. செடிகளுக்கு இயற்கை உரம் இடுவது, களை எடுப்பது, நோய் தாக் காமல் இருக்க மருந்து தெளிப்பது என பணி யாளர்கள் பராமரித்து வருகின்றனர். கோடை சீசனை வரவேற்கும் வகையில், தற்போதே பூங்காவில் ரோஜா மலர்கள் பூக்க தொடங்கி உள்ளது. சிவப்பு, மஞ்சள், வெள்ளை உள்பட பல்வேறு வண்ணங் களில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இதனை நடைபாதையில் நடந்து சென்ற படி சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதுடன், புகைப்படம் எடுத்து செல்கின்றனர். இது குறித்து பூங்கா நிர்வாகிகள் கூறியதாவது, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் ரோஜா பூங்காவில் கவாத்து பணிகள் மேற் கொள்ளப்படும். அதன்படி கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் கவாத்து பணிகள் தொடங்கி வைத்தார். இந்நிலையில், தற் போது வரும் சுற்றுலா பயணிகளை ஏமாற்றக் கூடாது என்பதற்காக 1ஆவது மற்றும் 5 ஆவது அடுக்கில் மட்டும் ரோஜா பூக்கள் தற்போது பூக்கும் வகையில் ஏற்கனவே நவம்பர் மாதத் திலேயே கவாத்து செய்யப்பட்டு விட்டது. இதனால் பூக்கள் பூத்துக் குலுங்கு கின்றன. இவை தொடர்ச்சியாக கோடை சீசனுக்கும் பூத்துக் குலுங்கும். இவ்வாறு தெரிவித்தனர். உலக ரோஜா சம்மேளனம் விசேஷ ரோஜா மலர்கள் மற்றும் இந்தியாவிலேயே சிறந்த ரோஜா பூங்காவுக்கான விருதை கடந்த 2006ஆம் ஆண்டு உதகை ரோஜா பூங்காவுக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.