திருப்பூர், நவ.8 - திருப்பூர் முக்கிய சாலைகளில் ஒன்றான பி.என்.சாலை முழுவதும் குண்டும், குழியுமாக உள்ளது. மழைக் காலங்களில் முழங்கால் அள வுக்குத் தண்ணீர் நிற்பதால், இது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத் திற்கு உள்ளாகின்றனர். திருப்பூர் ஸ்மார்ட் சிட்டியாக அறிவிப்பில் மட் டுமே உள்ளது. சாலைகள் ஸ்மார் டாக இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். திருப்பூர் பிஎன் சாலையில் புதிய பேருந்து நிலையம் முதல் அய்யம்பா ளையம் வரை ஆங்காங்காங்கே பெரிய பள்ளங்களும், குழிகளும் உள்ளன. மழைக் காலங்களில் இச்சா லையில் கழிவுநீர் மழைநீருடன் கலந்து கடைகளுக்குள் புகுந்து வியாபாரம் பாதிக்கப்படுவதாக புகார்கள் உள்ளன. இந்நிலையில், தற்போது சாலையில் உள்ள குழிக ளால் அடிக்கடி விபத்துகள் நிகழ்கி றது என பொதுமக்கள் வேதனை யுடன் கூறுகின்றனர். இதுகுறித்து வாகனஓட்டிகள் சிலர் கூறுகையில், திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முதல் பூலுவப் பட்டி வரை சாலை படுமோசமாக உள் ளது. தொழில் நிறுவனங்கள், புதிய பேருந்து நிலையம் என தினசரி ஆயி ரக்கணக்கான மக்கள் வந்து செல் லும் இச்சாலை இப்படி இருப்பதால், காலை மற்றும் மாலை நேரங்க ளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படு கிறது. மேலும் பெரிய பள்ளங்கள் இருப்பது பின்னால் வரும் வாகனங் களுக்குத் தெரிவதில்லை. இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகி றது. மழைக்காலங்களில் இச்சாலை யில் வாகனங்களை ஓட்ட முடியாத அளவிற்கு முழங்கால் வரை நீர் உள் ளதுடன், மழைநீர் சாலைகளில் ஆறாக ஓடுகிறது. இதனால் இச்சா லையில் மழைக் காலங்களில் வாக னங்களை ஓட்ட முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்ற னர். மேலும் ஆங்காங்கே பாதாள சாக்கடைக்காகத் தோண்டப்பட்ட குழிகளும் முழுமையாக மூடப்படா மல் உள்ளன. திருப்பூரில் முக்கிய சாலை இப்படி இருப்பது வேதனை யாக உள்ளது. அரசு இச்சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதேபோல திருப்பூர் மாநக ராட்சி செட்டிப்பாளையம் முதல் வெங்கமேடு வரை செல்லும் சாலை படுமோசமாக உள்ளது. பல இடங்க ளில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் வீணாகச் செல்கிறது. உடனடியாக நடவ டிக்கை எடுக்காவிட்டால் மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்துவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தட்டி வைக்கப்பட்டுள் ளது.