districts

img

தருமபுரி: இருளர் இன மக்களுக்கு வீடுகட்ட உத்தரவு மலைவாழ் மக்கள் சங்கத்தின் தொடர் முயற்சிக்கு பலன்

தருமபுரி, பிப்.13- தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் முயற்சியால் ஒகேனக் கல் மஞ்சகாய்கொடம்பு இருளர் இன மக்கள் 9 பேருக்கு இலவச வீடு கட்டுவதற்கான உத்தரவை தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி வழங்கினார். தருமபுரி மாவட்டம், பென்னா கரம் வட்டம் ஊட்டமலையில் பல தலைமுறைகளாக கல்லுக்கு அடி யில் சுமார் 50 க்கும் மேற்பட்ட மக் கள் வாழ்ந்து வந்தனர். 18 ஆண்டு களுக்கு பிறகு தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் முயற்சி யால் ஊட்டமலை ஒகேனக்கல் அருகே மஞ்சகாய் கொடம்பு பகுதி யில் குடிசை அமைத்து குடியேறி னர். இவர்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை என எதுவும் இல்லாமல் இருந்து வந்த னர். மலைவாழ் மக்கள் சங்கத்தின்  முயற்சியால் குடும்ப அட்டை பெற்று தந்தனர். மேலும் 2021 ஆம் ஆண்டு 24 நபர்களுக்கு தருமபுரிக்கு வருகை தந்த தமிழக முதல்வர் இலவச வீட்டுமனை பட்டா வழங்கி னார். அதனை தொடர்ந்து அரசு  வீடு வழங்கவேண்டும் என மலை வாழ் மக்கள் சங்கம் தொடர்ந்து போராடி வந்தது. இதனையடுத்து பழங்குடி நலவாழ்வாதார  மேம்ப டுத்தும் பொருட்டு இலவச அரசு வீடு  ரூ 4,95430 மதிப்பீட்டில் வீடு கட்டு வதற்கான உத்தரவை மாவட்ட ஆட் சியர் கி.சாந்தி, குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கினார். இலவச அரசு வீடு போராடி பெற்று வந்த தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்திற்கு மஞ்ச கொட்டாய்கொடம்பு இருளர் இன மக்கள் நெகிழ்ச்சியுடன் தங்களது நன்றி தெரிவித்தனர்.