districts

img

மயானத்திற்கு பாதை அமைத்து தர ஆட்சியரிடம் கோரிக்கை

திருப்பூர், பிப்.21- அவிநாசி வட்டம் ராமநாதபுரம் ஊராட்சியில் உள்ள ஆதிதி ராவிடர் குடியிருப்பு மக்கள் பயன்படுத்தும் மயானத்திற்கு பாதை அமைத்து தர கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் திங்களன்று மனு அளித்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது, மூன்று தலை முறைகளாக ராமநாதபுரத்தில் வாழ்ந்து வருகிறோம். நாங்கள்  பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பாதையில் தற்பொழுது  விவசாயம் நடைபெறுகிறது. இதனால் மயானத்திற்கு செல்வ தற்கு எங்களுக்கு பாதை இல்லை. இது குறித்து ஆட்சியர் அலு வலகத்தில் இரண்டு முறை மனு அளித்துள்ளோம். எந்த நட வடிக்கையும் எடுக்கப்படாததால் மீண்டும் திங்கட்கிழமை மனு அளித்துள்ளோம். இம்மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர், இப்பிரச்சனை யில் நடவடிக்கை எடுக்குமாறு அவிநாசி வட்டாட்சியருக்கு உத்தரவிட்டதாகத் தெரிவித்தனர். இந்நிகழ்வில் பொதுமக்களுடன் தீண்டாமை ஒழிப்போம்  முன்னணி மாவட்ட செயலாளர் சி.கே.கனகராஜ், ரங்கராஜ்  ஆகியோர் உடன் இருந்தனர்.