நாமக்கல், ஜூலை 12- “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் குறித்து, பொதுமக்களுக்கு கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந் துள்ளது. தமிழ்நாடு முழுவதும் பொது மக்கள் பயன்பெறும் வகையில், “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வருவாய்த்துறை, தொழிலாளர் நலத்துறை, விவசாயத்துறை, மாற் றுத்திறனாளிகள் நலத்துறை என 15 துறைகள் ஒரே இடத்தில் அமைக் கப்பட்டு, பொதுமக்களின் குறை களை மனுக்களாக பெற்று, அதை 30 நாட்களுக்குள் தீர்த்து வைக்கும் வகையில் இந்த முகாமானது செயல் பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு முழு வதும் இரண்டாம் கட்டமாக கிராமப் புறங்களில் உள்ள மக்களும் பயன் பெறும் வகையில், ஊரக பகுதிக ளில் “மக்களுடன் முதல்வர்” திட் டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழனன்று தொடங்கி வைத் தார். இதன்ஒருபகுதியாக நாமக் கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் ஊராட்சி மற்றும் பல்லக்காபாளை யம் ஊராட்சிகளுக்குட்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில், மக் களுடன் முதல்வர் திட்ட முகாம் வியாழனன்று துவக்கப்பட்டது. 15 துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் தனித்தனியே பொதுமக்களிடமி ருந்து மனுக்களை பெற்றனர். இருந் தபோதிலும் மிகக் குறைந்த அளவி லான பொதுமக்களே முகாமில் பங் கேற்றனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகை யில், தமிழக அரசின் சார்பில் “மக் களுடன் முதல்வர்” திட்ட முகாம் பல்வேறு பகுதிகளில் செயல்படுத் தப்பட்டு வருவது நல்ல அம்சமா கும். இருந்தபோதிலும் குமாரபா ளையம் பகுதியில் விசைத்தறித் தொழிலாளர்கள் மற்றும் காலை வேலைக்கு சென்று மாலை வீடு திரும்புவோர் அதிகளவில் உள்ள னர். இதுபோன்ற பகுதிகளில் தொழி லாளர்கள் வருகை தரும் வகையில் அதற்குரிய நாட்களில் முகாம் அமைத்தால், கூடுதலான பொது மக்கள் முகாமில் பங்கேற்பார்கள். மேலும், முகாம் குறித்து போது மான அளவு விழிப்புணர்வு இல்லா ததாலும், இந்த முகாம் ஏன், எதற்காக, யாருக்காக நடைபெறு கிறது என்பதுகூட பொதுமக்களில் பலருக்கும் தெரியாத நிலை உள் ளது. ஏராளமான அரசுத்துறை அதிகாரிகளின் ஒருங்கிணைப்பு டன் இந்த நிகழ்வு நடைபெறும் நிலையில், குறைந்த எண்ணிக்கை யில் வரும் பொதுமக்களால் முகா மின் நோக்கம் பயனற்றதாக போய் விடுகிறது. எனவே, இதுகுறித்து கூடுதலான விழிப்புணர்வை பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண் டும், என்றனர்.