தருமபுரி, மார்ச் 9- பிக்கிலி ஊராட்சிக்குட்பட்ட குறவன் திண்ணை கிராமத்தில் குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பிக்கிலி ஊராட்சிக் குட்பட்ட குறவன்திண்ணை கிராமத்தில் ஏரா ளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மலைக்கிராமமான இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சனியன்று காலிக்குடங்களு டன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மலைப்பகு தியை ஒட்டி அமைந்துள்ள இக்கிராமத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர்த் தொட்டி உள்ளது. இதன்மூலம் ஒகேனக்கல் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. மேலும், இரண்டு ஆழ்துளைக் கிணறுகள் மூலம் சிறுமின்விசை பம்பு மூலம் குடிநீர்த் தொட்டிக்கு நீரேற்றி குடிநீர் விநியோகம் செய் யப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக இக் கிராமத்துக்கு ஒகேனக்கல் குடிநீர் வழங்கப் படவில்லை. மேலும், ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்ட மின் மோட்டாரை பழுது பார்ப்பதற்காக எடுத்துச்சென்று பல மாதங் களாகியும் மீண்டும் கொண்டுவந்து பொருந்த வில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் அவ திப்பட்டு வருகின்றனர். இதனிடையே, கடந்த பிப்ரவரி மாதம் குடி நீர் கேட்டு சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது. அப்போது சமரசம் பேசிய அதிகாரி கள், ஒகேனக்கல் குடிநீர் விநியோகம் செய்யப் படும் என்று உறுதியளித்தனர். ஆனால், ஒரு வாரம் கூட முழுமையாக ஒகேனக்கல் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. தற்பொ ழுது மீண்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தப் பட்டு விட்டது. குடிநீர் தேவைக்காக இரண்டு கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டியுள்ளது. இருசக்கர வாகனம் வைத்துள்ளவர்கள் வாக னத்தில் குடங்களை கட்டி தண்ணீர் எடுத்து வருகின்றனர். மற்றவர்கள் டிராக்டர் வாகனத் தில் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். கால்நடைகளுக்கு தண்ணீரின்றி அடிமாட்டு விலைக்கு விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பல முறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத் தும், போராட்டங்கள் நடத்தியும் குடிநீர் கிடைக்கவில்லை. இதனால், குறவன் திண்ணை கிராமத்தில் குடியிருப்பதைவிட குடிபெயர்ந்து வெளியிடங்களுக்கு செல்லும் முடிவில் இருக்கிறோம், என கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.