கோவை, ஜூன் 30- ‘நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை திட்டத்தின் கீழ் மாநகர சாலைகளில் நவீன தொழில் நுட்பம் மூலம் இணையதள வசதி மற்றும் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவது உள்ளிட்ட தீர்மா னங்கள் கோவை மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட் டுள்ளது. கோவை மாநகராட்சி விக் டோரியா அரங்கில் மாமன்ற சாதாரண கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் வெள்ளியன்று நடைபெற்றது. துணை மேயர் வெற்றிசெல்வன், மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று கூட்ட தீர்மானங்கள் மீது விவாதம் நடத்தி நிறைவேற்றப் பட்டது. இதில், நுண்ணறிவு போக்கு வரத்து மேலாண்மை திட்டத்தின் கீழ் மாநகர சாலைகளில் நவீன தொழில்நுட்பம் மூலம் இணைய தள வசதி மற்றும் உட்கட்டமைப்பு களை மேம்படுத்தி போக்குவரத்து மேலாண்மை மூலம் பொது மக்கள் பயன்பெறும் வகையில் திட்டம் செயல்படுத்துவது. கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 88வது வார்டுக்கு உட் பட்ட செங்குளம் பகுதியில் இருந்து மழைக் காலங்களில் அதிக உபரி நீர் வெளியேறுவதால் மற்றும் மழைநீர் செல்வதற்கு வடிகால் இல்லாததால் குடியிருப்பு பகுதி களில் மழைநீர் சேர்ந்து போக்கு வரத்து மற்றும் பொது மக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து மேயர், துணை மேயர், ஆணையர், துணை ஆணை யர், கவுன்சிலர்களின் மூலம் நேரடி யாக ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இதனையடுத்து, இக் கூட்டத்தில், மழைக்காலத்தில் செங்குளத்தில் இருந்து வரும் உபரி நீர் மற்றும் மழை நீரை வெளியேற்ற ரூ. 97 லட்சத்தில் திட்ட பணிகள் மேற் கொள்ள இந்த கூட்டத்தில் தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. கோவை மாநகராட்சியில் ஒருங் கிணைந்த பாதாள சாக்கடை திட்டம் பழைய 60 வார்டுகளுக்கு ஜவஹர் லால் நேரு தேசிய நகர்ப்புற புனர மைப்பு திட்டத்தின் கீழ் ரூ.377.13 கோடி செலவில் மேற்கொள்ள நிர் வாக அனுமதி பெறப்பட்டது. இது போன்று பல்வேறு முக்கிய தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தூய்மை பணி தனியாருக்கு
மாமன்றத்தில் 25க்கும் மேற் பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. இதில், கோவை மாநக ராட்சி திடக்கழிவு மேலாண்மை பெற்ற பணிகளுக்கு ஒப்பந்ததாரர் அல்லது நிறுவனம் அல்லது சேவை நிறுவனம் நியமித்தல் தொடர்பான தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்க மாமன்ற கூட்டத்தில் அனுமதி கோரப்பட்டது. இதற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் வி.இராமமூர்த்தி உள்ளிட்ட சிபிஎம் கவுன்சிலர்களும், இதர கட்சிகளின் கவுன்சிலர்களும், ஆளும் கட்சியின் சில கவுன்சிலர் களும் எதிர்ப்பு தெரிவித்தனர். பலரும் இது எங்களுடன் கலந்து ஆலோசனை செய்துவிட்டு நிறை வேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனையேற்று இத் தீர்மானம் ஒத்தி வைக்கப்பட்டது. முன்னதாக, கோவை மாநக ராட்சி கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மு. பிரதாப் பேசுகை யில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டு பகுதிகளில் வரைபடம் ஒன்று தயார் செய் துள்ளோம். அதில் எந்தெந்த மாநக ராட்சி சாலைகள் எப்போது அமைக் கப்பட்டது, இதில் எந்த சாலை கள் எப்போது சீரமைக்கப்பட்டது, எங்கு புதிதாக சாலைகள் அமைக்க வேண்டும், எங்கு சாலைகளை சீரமைக்க வேண்டும், எங்கு போக்குவரத்து அதிகமாக உள்ளது, எந்த சாலைக்கு முக்கி யத்துவம் கொடுத்து பணியை முதலில் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது. அதன்படி சாலை பணிகளை முக்கியத்துவம் அடிப் படையில் விரிவாக அமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர ப்படுகிறது. மாநகராட்சியின் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்ததாரர் களுக்கு ரூ.230 கோடி வரை நிலுவை தொகை வழங்க வேண்டி இருந் தது. இதன் காரணமாக கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக பல டெண்டர்கள் எடுக்க ஒப்பந்த தாரர்கள் முன் வரவில்லை. இத னால் ரீ டெண்டர்கள் விடப்பட்டு வந்திருந்த நிலையில், சொத்து வரி போன்றவை உயர்வு காரணமாக மாநகராட்சிக்கு நிதி வந்ததன் அடிப் படையில் தற்போது ரூ.230 கோடி யில் இருந்து ரூ.25 கோடி மட்டுமே நிலுவை உள்ளது. எனவே தற் போது ஒப்பந்த பணிகள் மிகவும் துரிதமாக நடைபெற்று வருகிறது. மாநகராட்சியின் நிதி தேவையின் அடிப்படையில் கடன்களுக்கு முன் னுரிமை அளித்து கொடுக்கப்பட்டு வருகிறது என்றார்.