உடுமலை, அக்.20- அரசு ஊழியர் சங்கத்தின் உடுமலை வட்டக்கிளை மாநாட் டில், நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் உடுமலை வட்டக் கிளை மாநாடு சனியன்று நடைபெற்றது. முன்னதாக, வட்டாட் சியர் அலுவலகத்தில் இருந்து பேரணியாக சென்று, சங்கத் தின் அலுவலகத்தில் வட்டக்கிளை தலைவர் விவேகானந்தன் தலைமையில் மாநாடு துவங்கியது. மாவட்ட செயற்குழு உறுப் பினர் ஜெகதீஸ்வரன் வரவேற்றார். மாவட்ட இணைச்செயலா ளர் வைரமுத்து துவக்கவுரையாற்றினார். வட்டக்கிளைச் செயலாளர் வெங்கிடுசாமி அறிக்கையை முன்வைத்தார். அனைத்துத்றை ஓய்வூதியர் சங்க வட்டக்கிளைத் தலைவர் தாசன், சிஐடியு மாவட்ட துணைச்செயலாளர் ஜெகதீசன் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும். அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் சுமார் நான்கு லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண் டும். அரசு ஊழியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் பணி நேரம் முடிந்த பின்னரும், விடுமுறை தினத்திலும் நடத்துவதை தவிர்க்க வேண்டும். 21 மாத பணப்பலன்களை தர வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் உடுமலை வட்டக்கிளைத் தலைவராக மார்க்கண்டன், செயலாளராக வெங்கிடுசாமி, பொருளாளராக தங்கபாண்டியன், துணைத்தலைவர்களாக விவேகானந்தன், எலிசபெத், சிவக்குமார், பஞ்சாட்சரம் மற் றும் இணைச்செயலாளர்களாக ஈஸ்வரி, பாலமுருகன், பெரிய சாமி, பிரேமலதா, அருண்குமார் ஆகியோரும், மாவட்ட செயற்குழு உறுப்பினாரக ஜெகதீஸ்வரன், தணிக்கையாளர் களாக கருப்புசாமி, செல்வராஜ் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன் நிறை வுரையாற்றினார்.