வெடிபொருள் வீசி மீன் பிடித்தபோது, ஆற்றில் குளித்த நபர் உடல் சிதறி பலி
சேலம், ஏப்.20- எடப்பாடி அருகே காவிரி ஆற்றில் வெடிபொருளை வீசி மீன் பிடித்தபோது, ஆற்றில் குளித்து கொண்டிருந்த வாலிபர் உடல் சிதறி உயிரிழந்த நிலையில், மீனவரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே பூலாம்பட்டி மற்றும் ஈரோடு மாவட்டத்தை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே நெருஞ்சிப்பேட்டை கதவணை உள்ளது. இந்த கதவணை பகுதியில் தினமும் ஏராளமான மீனவர்கள் பரி சலில் சென்று மீன் பிடித்து வருகின்றனர். சிலர் வெடி பொருட்களை பயன்படுத்தி மீன் பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், புதனன்று மாலை பூலாம் பட்டி அருகே உள்ள ஊத்துக்குளி காடு பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்ற முருகன் (40) என்ற மீனவர், கதவணை பகுதியில், பாறைகளை உடைக்க பயன்படுத்தப்படும் டெட்டனேட்டர் என்ற வெடி பொருளை பயன்படுத்தி மீன் பிடித்தார். அவர் ஒரு டெட்டனேட்டரை தண்ணீரில் தூக்கி வீசியபோது, காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்த வாலிபர் மீது விழுந்து, அவர் உடல் சிதறி உயிரிழந்தார். அந்த வாலிபருடன் குளித்து கொண்டிருந்த மற்றொருவர் இதனை பார்த்து கூச்சலிட்டார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து வாலிபரின் உடலை மீட்டு, பூலாம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே அங்கிருந்து மீனவர் முருகன் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீ சார் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்த வாலிபர் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள ஒட்ட மெத்தையைச் சேர்ந்த முருகன் மகன் மோகன்குமார் (22) என்பதும், பூலாம்பட்டி அருகே ஆனைப்புலிகாடு பகுதியை சேர்ந்த மாதையன் என்பவர் வீட்டுக்கு விருந்தாளியாக வந்ததும் தெரியவந்தது. மேலும், மோகன்குமார் தனது நண்பரான பள்ளிபாளையத்தை சேர்ந்த பூபதி என்பவ ருடன் கதவணை பகுதியில் காவிரி ஆற்றில் குளித்த போது, வெடிபொருள் விழுந்து உயிரிழந்ததும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் மோகன்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து தப்பி ஓடிய மீனவர் முருகனை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
பாலியல் தொல்லை முதியவர் கைது
உதகை, ஏப்.20- நீலகிரி மாவட்டம். ஊட்டியை சேர்ந்த 10 வயது சிறுமி தனது பாட்டியுடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் ஜான் லெசி ரிச்சர்ட் (78) என்பவர் வசித்து வரு கிறார். இவர் சிறுமிக்கு பாலியல் தொலைவை கொடுத்துள்ளார். இதுகுறித்து, தனது பாட்டியிடம் தெரிவித்த நிலையில், ஊட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத் தில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசார ணையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து, முதியவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு: மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி
திருப்பூர், ஏப். 20 - திருப்பூரில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு வியாழனன்று முடிவடைந்த நிலையில் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி யில் ஒருவருக்கு ஒருவர் கைகுலுக்கி, அரவணைத்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். தமிழ்நாடு அரசு தேர்வு துறை மூலம் நடத்தப்படும் எஸ்எஸ் எல்சி 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்.6ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வியாழனன்று நிறைவடைந்தது. திருப்பூர் மாவட் டத்தில் 106 மையங்களில் 354 பள்ளிகளை சேர்ந்த 30,687 மாணவ, மாணவிகள் மற்றும் தனித் தேர்வர்கள் 1484 பேர் என மொத்தம் 32,171 பேர் இந்தப் பொதுத் தேர்வை எழுதினர். இறுதி நாளான வியாழனன்று சமூக அறிவியல் தேர்வு நடை பெற்றது. திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் தேர்வு எழுதி முடித்து வெளியே வந்த மாண விகள், ஒருவருக்கொருவர் கைகளை கொடுத்தும், கட்டி அணைத்துக் கொண்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத் தினர். அதேபோல் வெவ்வேறு பகுதிகளிலும் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் தங் கள் நண்பர்களுடன் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு அடைந் ததை கைகுலுக்கி கொண்டாடினர்.
தாராபுரத்தில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்
திருப்பூர், ஏப்.20 - திருப்பூர் மற்றும் தாராபுரம் வருவாய் கோட்டத்திற்கு உட் பட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் முறையே திருப்பூர் சார் ஆட்சியர் மற்றும் தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளியன்று (இன்று) காலை 11 மணியளவில் நடைபெறுகிறது. திருப்பூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையிலும், தாராபுரம் கோட் டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் இரா.குமரேசன் தலைமையிலும் இக்கூட்டங்கள் நடைபெறும். இதில் திருப் பூர் வருவாய் கோட்டம் மற்றும் தாராபுரம் வருவாய் கோட்ட விவசாயிகள் பங்கேற்று பயன்பெறுமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
திருப்பூரில் தடை செய்யப்பட்ட 1.5 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
திருப்பூர், ஏப்.20 - திருப்பூர் மாநகரில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து நடத்திய திடீர் சோதனை யில், 1.5 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறி முதல் செய்யப்பட்டது. திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன் படுத்தப்படுகிறதா என புதனன்று திடீர் ஆய்வு மேற்கொண்ட னர். இப்பகுதியில் 25க்கும் மேற்பட்ட கடைகளில் நடத்தப்பட்ட இந்த திடீர் ஆய்வில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒன்றரை டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.10,500 அபராதமும் விதிக்கப்பட்டது.
ஏப். 26 விவசாயிகள் குறை தீர் கூட்டம்
திருப்பூர், ஏப். 20 - திருப்பூர் மாவட்ட விவசா யிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தலைமையில் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக குறிப் பில் தெரிவித்துள்ளதாவது, ஆட்சியர் அலுவலக வளா கத்தில், ஏப்.26 ஆம் தேதி விவசாயிகள் குறை தீர் கூட் டம் நடைபெற உள்ளது என வும், விவசாயிகள், நுண்ணீர் பாசனம் அமைத்திட ஏது வாக வேளாண்மை அலுவ லர், தோட்டக்கலை அலுவ லர் மற்றும் வேளாண் பொறி யியல் துறை அலுவலர் களைக் கொண்டு வேளாண் உதவி மையம் அமைக்கப் பட்டிருக்கும். இதில் விவசா யிகள் பங்கேற்கும்படி தெரி விக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் காவல் நிலையத்தில் புகார்
திருப்பூர், ஏப்.20 - திருப்பூரில் வழக்கறிஞருக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர்கள் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித் தனர். திருப்பூர், கான்வென்ட் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் என்கிற பாலசுப்பிரமணி. இவர் திருப்பூர் நீதிமன்றத் தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் செவ்வாயன்று இரவு இவர் வீட்டிற்கு சென்று கொண்டி ருந்தபோது தொலைபேசி வாட்ஸ் ஆப் கால் மூலம் குறுந் தகவல் வந்துள்ளது. அதில் ஆனந்த் பற்றியும், அவரது குடும் பத்தை பற்றியும் தரக்குறைவாக பேசியும், கொலை மிரட் டல் விடுத்தும் குறுந்தகவல் அனுப்பப்பட்டிருந்தது. அந்த எண் ணிற்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட் டிருந்தது. சிறிது நேரம் கழித்து மீண்டும் அதே தொடர்பு எண் ணில் இருந்து வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட நபர் ஒருவர் குறிப்பிட்ட வழக்கிற்கு ஆஜராக கூடாது எனவும், மீறி ஆஜரானால் கோர்ட்டிலேயே கொலை செய்து விடுவதாக கூறி மிரட்டியுள்ளார். இதுகுறித்து ஆனந்த் மற்றும் திருப்பூர் நீதிமன்றத்தில் பணி யாற்றக்கூடிய சக வழக்கறிஞர்கள் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புதனன்று புகார் மனு அளித்தனர்.
ஆட்சியரிடம் மனு கொடுத்ததால் குடிசை அகற்றம் பாதிக்கப்பட்டவர் தீ குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு
இளம்பிள்ளை, ஏப்.20- மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித் தார் என்பதால், எந்த வித முன் அறி விப்பின்றி போலீசார் பாதுகாப்போடு குடிசைகளை அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந் நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத் தினர் தீக்குளிக்க முயற்சித்தால் பர பரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், இடங்கண சாலை நகராட்சிக்குட்பட்ட, மாட்டை யாம்பட்டி பகுதியில், நத்தம் புறம் போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத் தில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இதில் ஒரு சிலருக்கு மட்டும் பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதே பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி மனைவி ஆராயி (42) இவரது மகள் கள் மோகனா, பிரியா ஆகியோர் உள் ளனர். இந்நிலையில், 20 ஆண்டுக ளுக்கு மேலாக, சுமார் 5 செண்ட், நத் தம் புறம்போக்கு நிலத்தில் கூரை அமைத்து குடியிருந்த வந்த நிலை யில், கூரையை அகற்றி விட்டு ஏசிசி, அட்டை வீடு அமைக்க பொருட்களை வாங்கிய பொருளை வீட்டின் முன் வைத்துள்ளனர். இதனையறிந்த திமுக பிரமுகர் உள்ளிட்ட 4 பேர் வீடு கட்ட ரூ.2 லட்சம் பணம் கேட்டதாக கூறப் படுகிறது.
இதனையடுத்து, ஆராயி கடந்த 15.ஆம் தேதி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித் தார். புகார் மனு மீது அதிகாரிகள் விசா ரணை நடைபெற்ற வரும் நிலையில், கடந்த 18 ஆம் தேதி சம்பவ இடத்திற்கு வந்த சங்ககிரி வருவாய்துறையினர் மற்றும் மகுடஞ்சாவடி காவல் ஆய் வாளர் வெங்கடேஷ் பிரபு தலைமை யில் போலீசார் குவிக்கப்பட்டு, ஜேசிபி இயந்திரத்தை கொண்டு, வீடுகட்ட வைத்திருந்த பொருட்கள் மற்றும் மரங் களை முன்னறிவிப்பின்றி அகற்றி னர். இதனால், இக்குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அப்போது, பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பிரியா, திடீரென தலையில் மண் ணெண்னையை ஊற்றி தீ வைக்க முயன் றார். நல்வாய்ப்பாக, பாதுகாப்பு பணி யில் இருந்த பெண் போலீசார் தடுத்து காப்பாற்றினர். இதனையடுத்து, சம் பவ இடத்திற்கு வந்த காவல் துணை கண்காணிப்பாளர் ஆரோக்யராஜ் சம் பந்தபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். பின் னர், ஆராயி குடும்பத்தினர் இடங்க ணசாலை வி.ஏ.,விடம் மனு அளித்து சென்றனர். நத்தம் புறம்போக்கில் குடியி ருந்த பெண் குடும்பத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்தி ருந்த நிலையில் முன் அறிவிப்பின்றி குடிசை வீட்டை அகற்றியது அப்பகு தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யது. மேலும் மண்ணெண்னை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நபர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் நகைச்சுவை மன்னன் அண்ணாமலை தொல்.திருமாவளவன் எம்.பி., விமர்சனம்
கோவை, ஏப்.20- கோவை மாவட்டம், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சனாதான எதிர்ப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரு மான தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார். இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாட்டில் நடை பெற்று வரும் ஆணவப்படுகொலைகளை கண்டித்தும், அதற்கான தடுப்புச்சட்டத்தை இயற்ற வேண்டும் என்று வலியு றுத்தியும் ஏப்.22 ஆம் தேதியன்று (நாளை) விசிக சார்பில் கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இச்சம்ப வத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருந்தாலும், இது போன்ற சாதிய ஆணவப்படுகொலைகள் தொடரக்கூடாது என்பதால், ஆணவப்படுகொலைகள் தடுப்பு சட்டம் தேவைப்படுகிறது. அப்படி சட்டம் இயற்றப்பட்டால் அந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் கிடைக்கும் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டால்,
இது போன்ற குற் றங்கள் குறையும். எளிய மக்களிடம் விழிப்புணர்வு இருந்தா லும், இதுபோன்ற சட்டங்கள் இல்லை என்பது குறைபாடா கவே பார்க்கப்படுகிறது. இந்த சட்டத்தை இயற்ற ஒன்றிய அரசு தயக்கம் காட்டுகிறது. மாநில அரசு தயக்கமின்றி செயல்பட வேண்டும். பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கும் வகையில், தமிழ்நாடு அரசு ஆணவப்படுகொலை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், என்றார். மேலும், மதம் மாறிய தலித் மக்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டும் என்று சட்டம் இயற்றி இருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதாக பாஜக கூறுவது அபத்தமானது. இந்த சட்டம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நிறை வேற்றப்பட்டுள்ளது. பாஜக தான் இதை திருத்தி அரசிய லாக்க பார்க்கிறது. அண்ணாமலை வெளியிட்டது ஊழல் பட்டியல் அல்ல. சொத்து பட்டியல் என ஊடகங்களில் தகவல்கள் வந்து கொண் டிருக்கிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் நேரத்தில் தாக்கல் செய்கின்ற பிரமாண பத்திரத்தில் சொத்து பட்டியல் தாக்கல் செய்யப்பட்டிருக்கும். அதை திருடி தான் அண்ணாமலை தற்போது வெளியிட்டு உள்ளார். அவரை (அண் ணாமலை) பொறுத்தவரை ஊடக வெளிச்சத்திலேயே இருக்க வேண்டும். தன்னைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்பதற் காக என்ன விலையும் கொடுப்பார். தவறான, பொய்யான, அவதூறான தகவல்களை பரப்பி கூச்சம் இல்லாமல் செயல் படுகிறார். சொல்லப்போனால் அண்ணாமலை அரசியல் நகைச்சுவை மன்னன் என்றார்.