உதகை, மே 28- கோடைவிழாவின் ஒரு பகுதி யாக 63 ஆவது பழக்கண்காட்சி குன் னூர் சிம்ஸ் பூங்காவில் சனியன்று துவங்கியது. இதில் பழங்களால் வடி வமைக்கப்பட்டிருந்த பல்வேறு உரு வங்கள் சுற்றுலா பயணிகளை வெகு வாக கவர்ந்தது. நீலகிரி மாவட்டத்தில் கோடை சீச னுக்கு ஏராளமான சுற்றுலா பயணி கள் வருகை புரிகின்றனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஆண்டு தோறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடை விழா நடைபெறுகிறது. இதில் மலர் கண்காட்சி, காய்கறி கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழக்கண்காட்சி ஆகிய நடைபெறுவது வழக்கம். அதன் படி, நீலகிரி கோடை விழா மே 6 ஆம் தேதி கோத்தகிரியில் 12 ஆவது காய்கறி கண்காட்சியுடன் தொடங்கி யது. இந்நிலையில், கோடை விழா வின் நிறைவு விழாவாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 63 ஆவது பழக் கண்காட்சி சனியன்று துவங்கியது. பழக்கண்காட்சிக்காக பூங்காவில் நடவு செய்யப்பட்ட இரண்டரை லட் சம் மலர் நாற்றுகள் தற்போது பூத்து குலுங்குகிறது. மேலும், பழங்களால் பல்வேறு வகையான உருவங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதில் அன் னாச்சி பழம், புரூட் பேஷ்கட், மலபார் அணில், மண் புழு, பிரமீடு, ஊட்டி 200, மஞ்சப்பை உட்பட பல்வேறு வகை யான உருவங்கள் சுற்றுலா பயணி களை வெகுவாக கவர்ந்தன. முன்னதாக, பழக்கண்காட்சி யினை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தொடங்கி வைத் தார். இதன்பின் அவர் பேசுகையில், பழக்காட்சியின் சிறப்பம்சமாக சுமார் 12 டன் அன்னாசி பழங்களை கொண்டு, பிரம்மாண்ட அன்னாசி பழம் அமைக்கப்பட்டுள்ளது. குழந் தைகள், சுற்றுலா பயணிகள் என அனைத்து தரப்பு மக்களையும் கவ ரும் விதமாக பல்வேறு வகையான பழங்களை கொண்டு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதில், பழக் கூடை, பிரமிடு, மண்புழு போன்ற வடிவங்களும், தமிழ்நாடு அரசின் திட்டமான “மீண்டும் மஞ்சப்பை” திட்டத்தினை ௮னைவரும் கடை பிடிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மஞ்சப்பை போன்ற வடி வங்களும், நீலகிரி மாவட்டத்தின் 200 ஆவது ஆண்டினைக் கொண்டாடும் வகையில் உதகை 200 போன்ற வடி வங்கள் பழங்களை கொண்டு உரு வாக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள் ளது, என்றார். கடந்த சனியன்று துவங்கிய இந்த பழக்கண்காட்சி ஞாயிறன்றும் நடை பெற்றது. விடுமுறை தினங்களில் நடைபெற்ற இந்த கண்காட்சியினை கண்டு வெளி மாநில, மாவட்டங்களி லிருந்து வந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.