திருப்பூர், டிச. 4 - இந்தியாவில் அரசியல் அமைப்புச் சட்டப் படி சுயேட்சையான நீதித்துறையின் செயல் பாட்டுக்கு தேசிய நீதித்துறை ஆணையம் அமைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பிரதாபன் ஜெய ராமன் கூறினார். திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் “அரசியல் சாசன விழுமி யங்களும், கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பும் என்ற தலைப்பில் 10 நாள் காலை நேர தொடர் வகுப்பு கடந்த நவம்பர் 30ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது. தியாகி பழனிச்சாமி நிலையத்தில் ஞாயிறன்று நடைபெற்ற ஐந்தாம் நாள் அமர்வுக்கு கட்சியின் பல்லடம் ஒன்றியச் செயலாளர் ஆர்.பரம சிவம் தலைமை வகித்தார். இதில், “அரசியல் சாசனத்தில் நீதித்துறையின் பங்கு” என்ற தலைப்பில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பிரதா பன் ஜெயராமன் கருத்துரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், கம்யூ னிஸ்ட் இயக்கத்தின் மிகப்பெரும் தலை வரான ஏ.கே.கோபாலன் சுதந்திரம் பெற்று இரண்டே மாதங்களில் சிறை வைக்கப்பட் டார். 1950இல் குடியரசாக அறிவிக்கப்பட்ட பின் அவர் விடுதலை செய்யப்பட்டார். அதற்க டுத்த 2 மாதத்தில் அவர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் அரசியல் சாசனப்படி தன்னை தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்தது சட்டவிரோ தம் என்று வழக்குத் தாக்கல் செய்தார். ஆறு பேர் அடங்கிய நீதிபதிகள் அமர்வில் ஐந்து பேர் தடுப்புக் காவலில் கைது செய்தது சரி என்றும் ஒரேயொரு நீதிபதி மட்டும், பிரிவு 19ன்படி அவர் கைது செய்யப்பட்டது தவறு என்றும் தீர்ப்பளித்தனர். அதன்பிறகு மேனகா காந்தி பாஸ்போர்ட் முடக்கப்பட்டபோது அவர் வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கில் நீதிபதி பகவதி, ஏற்கெனவே ஏ.கே.கோபாலன் வழக்கில் நீதிபதி பசல் அலி வழங்கிய சிறுபான்மைத் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு பாஸ் போர்ட் முடக்கம் தவறு என்று தீர்ப்பளித் தார். அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்த உரி மையைக் கூட 20 ஆண்டு காலம் நீதித்துறை தடுத்து வைத்திருந்தது. இன்று வரை அரசி யல் சட்டம் வழங்கிய உரிமையை நீதித்து றையில் நிலை நிறுத்த முடியாத நிலை உள் ளது.
இந்திய நீதித்துறை வரலாற்றில் மூன்று விதமாக பிரித்துப் பார்க்கலாம். அவசர நிலை காலத்துக்கு முன்பு, அவசர நிலை காலத்துக் குப் பிறகு 1990 வரை, 1990க்குப் பிறகு உலக மய, தாராளமய, தனியார்மய காலத்தில் அவற்றின் செயல்பாடுகள். நீதிமன்றங்கள் அரசின் தன்மைக்கு உட்பட்டு அதன் அங்க மாக மாறுவதைக் காண முடிகிறது. நீதித் துறை என்பது ஒரு அரசின், வர்க்கத்தின் நலனை சார்ந்திருக்கிறது என்று மார்க் சிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலா ளர் இஎம்எஸ் சொன்னார். நீதித்துறை அரசின் வர்க்க நலனைச் சார்ந்திருக்கி றது என்று கூறினார். இன்று 1990க்கு பிறகு வரும் தீர்ப்புகளைப் பார்த்தால் முழுக்க முழுக்க முதலாளி வர்க்க நலனை சார்ந்த, தனியார்மயம், தாராளமயம், உலகமயம் சார்ந்த, முதலீட்டாளர்களை எந்த விதத்தி லும் பாதித்து விடக் கூடாது என்ற நிலையில் தான் தீர்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அதேபோல் தனிமனித உரிமைகள் வழக் கில் வரக்கூடிய தீர்ப்புகள். பீமா கோரேகான் வழக்கில் அம்பேத்கார் பேரன் ஆனந்த் டெல் டும்டே சிறை வைக்கப்பட்டு இரண்டு நாள்க ளுக்கு முன்புதான் பிணையில் விடுவிக்கப் பட்டார். அதேபோல் ஸ்டேன்ஸ் சுவாமி, நடுங் குவாத நோயால் அவதிப்பட்டவர், டம்பளரில் குடிநீர் குடிப்பதற்கு உறிஞ்சு குழல் கேட்டது கூட நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படாமல், அவர் சிறையிலேயே மரணமடைந்தார். ஜேஎன்யூ முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித் சிஏஏவுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறையில் வைக்கப் பட்டு எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட வில்லை என்று நேற்று விடுவிக்கப்பட்டார். நிரபராதியாக வெளியே வருகிறார். ஆனால் இரண்டு ஆண்டு வாழ்க்கை போய்விட்டது. அதேசமயம் இதற்கு நேர் மாறாக, ரிபப் ளிக் டிவி நிர்வாகி அர்னாப் கோஸ்வாமி மீது வழக்கு தொடுத்தவுடன் இரவு முழுவதும் விசாரித்து உடனடியாக தீர்ப்பு வழங்கினர். அதேபோல் நடிகை கங்கனா ரணாவத் வீடு விதிமுறை மீறலில் உள்ளது. வீடு இடிக்கப் பட்டது தொடர்பாக வழக்கு தாக்கலில் எக்ஸ பிரஸ் வேகத்தில் விசாரித்து தீர்ப்பு வழங்கி னர்.
சொரபுதீன் சேக் வழக்கில் அமித்ஷா குற்றம் சாட்டப்பட்டவர், நீதிமன்றத்தில் ஆஜ ராக வேண்டும் என சொன்ன நீதிபதி லோயா மர்மமான முறையில் உயிரிழக்கிறார். அதற்கு இரண்டாண்டுகளுக்குப் பிறகு 2016 -ல், லோயாவின் சகோதரி கொடுத்த பேட்டி யில் லோயாவின் உடலில் ரத்தக்கறை இருந் தது என்று கூறியிருக்கிறார். இது பற்றி உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் பெருத்த மௌ னம் சாதித்தது. நீதித்துறை ஆளும் கட்சி யின் அனைத்து விதமான செயல்பா டுகளுக்கும் கண்மூடித்தனமாக இருந்தால் மக்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும் என்பதைப் பற்றிக்கூட நீதித்துறை சிந்திக்க வில்லை. இதற்கு அடிப்படை காரணம், நீதிப திகள் நியமன நடைமுறையில் உள்ளது. நீதிப திகளை நீதிபதிகளே நியமித்துக் கொள்ளும் கொலிஜியம் முறை உள்ளது. இது சரியான நடைமுறையாக படவில்லை என குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் பரிசீலிக்கச் சொன்னார். ஆனால் கொலிஜியம் என்பதை நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. 2014 ஆகஸ் டில் தேசிய நீதித்துறை நியமன ஆணைய சட்ட வரைவை மோடி அரசு கொண்டு வந்தது. இதில் அரசுக்கும், நீதித்துறைக்கும் மோதல் ஏற்பட்டது, இந்த சட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஐந்து நீதிபதிகள் அமர்வில் நீதிபதி செல்லமேஸ்வர் மட்டும் கொலிஜியம் வெளிப்படைத் தன்மை இல்லை, இது சரியல்ல என்று குறிப்பு கொடுத் தார்.
அதேசமயம் மத்திய அரசு கொலிஜியம் பரிந்துரையை ஏற்றுக் கொள்வதில்லை, தங்களுக்கு சாதகமானவர்களை மட்டுமே ஏற்றுக் கொள்கின்றனர். சமீபத்தில் 19 பேரை கொலிஜியம் பரிந்துரைத்ததை 17 பேரை ஏற்றுக் கொண்டு 2 பேரை சட்ட அமைச்ச கம் அங்கீகரிக்கவில்லை. ஆனால் சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ டுவிட்டரில் இரு வரை நீதிபதிகளாக அங்கீகரித்ததாக போடு கிறார். ஆனால் நீதித்துறை இதைப் பற்றி சாதாரண நோட்டீஸ்தான் அனுப்பியது. இந்தியாவில் 24 உயர்நீதிமன்றங்களில் 1097 நீதிபதிகளில் 484 பேர்தான் இருக்கி றார்கள். 600க்கும் மேற்பட்ட நீதிபதிகள் பணி யிடம் காலியிடம் உள்ளது. 1 கோடியே 30 லட்சம் பேருக்கு ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி தான் உள்ளனர். மக்கள் தொகைக்கும் நீதிப திகள் எண்ணிக்கைக்கும் உள்ள விகிதா சாரம் 0.2 சதவிகிதம்தான். கொலீஜியம் முறை வெளிப்படைத் தன்மை இல்லாமல் மூடப்பட்டதாக இருக்கி றது. வாரிசுகள் நீதிபதிகளாக இருக்கும் நிலை உள்ளது. ரத்த உறவுகளுக்குச் சாதகமாக செயல்படும் நிலை உள்ளது. பதவி ஓய்வுக் குப் பிறகு உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி களை நிகரான பதவி தருவர். ஆனால் அமித் ஷாவை விடுவித்த உச்சநீதிமன்ற நீதிபதி சதா சிவம் ஓய்வுக்குப் பிறகு கவர்னராகப் பொறுப் பேற்றார். சட்ட அமைச்சராக இருந்த கிருஷ்ணய் யர் பின்னர் பதவி, அரசியலை விட்டு வெளி யேறி பின்னர் நீதிபதியாக வந்தார். அதே போல் திமுக மாவட்டச் செயலாளராக இருந்த ரத்தினவேல் பாண்டியன் பின்னர் அரசியலை விட்டு நீதித்துறைக்கு நீதிபதியாக வந்தார். ஆனால் தற்போதைய நிலை எதிர்மறை யாக மாறுகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய், தன் வழக்கில் தானே நீதிபதியாக பாலியல் குற்றச் சாட்டில் தான் நிரபராதி என தீர்ப்பளித்துக் கொண்டார். இவர் ஓய்வுக்குப் பிறகு எம்.பி.யாகப் பதவி பெற்றார். ஓய்வுக்குப் பிறகு ஆதாய பதவியுடன் போகிறவர்கள், தீர்ப்பு எப் படி அளிப்பார்கள்?
ஓய்வுக்குப் பிறகு பதவி என்பதை ஒழித் தாலே நீதித்துறை ஓரளவு சரியாகும். பதவி உயர்வில் பாரபட்சம். ஆளுவோருக்கு உடன் பட்டால் பதவி, உடன்படாவிட்டால் பதவி உயர்வு மறுக்கப்படும், மரணம் கூட ஏற்பட லாம் என்பதே இன்றைய நிலை. நீதித்துறையின் சுயேட்சையான செயல் பாட்டுக்கு தேசிய நீதித்துறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்கிறது மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. நீதிபதிகள் நியம னத்தில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும். நீதிபதிகள் பெயர் பரிந்து ரைத்தல் உட்பட அனைத்தும் மக்கள் பார் வைக்கு வைக்கப்பட வேண்டும். இந்த ஆணையத்தில் மக்கள் பிரதிநிதிகள், அரசின் பிரதிநிதிகள், நீதித்துறை பிரதிநிதிகள், பொது மக்களில் பிரபலமானவர்கள் இருக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி சொல்கி றது. உச்சநீதிமன்ற நீதிபதி, உயர்நீதிமன்ற நீதிபதி, ஒன்றிய சட்ட அமைச்சர், பிரதமரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் என இருவரும் சேர்ந்து நியமிக்கும் சமூகத்தில் புகழ்மிக்க இருவர், பார் அசோசியனில் ஒரு வர், பொது மக்களில் ஒருவர் இருக்க வேண் டும். அதன் செயல்பாடுகள் வெளிப்படைத் தன்மையாக இருக்க வேண்டும். பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சேர்ந்து நியமிக்கும் இருவர் சுழற்சி முறையில் இருக்க வேண்டும். பட்டியலின, இதர பிற்ப டுத்தப்பட்ட, மற்றும் குறைந்தபட்சம் ஒரு பெண் என இருக்க வேண்டும் என மார்க்சி ஸ்ட் கட்சி கூறுகிறது. நீதிபதிகளை திரும்ப அழைக்கும் உத்தரவாதமும் இருக்க வேண் டும்.
நீதிபதி நியமனம், நீதிபதி நீக்கமும் வெளிப்படையாக இருக்க வேண்டும். சட்டத் தின் முன் அனைவரும் சமம் என்றால் நீதிபதி களும் சட்டத்தின் முன் சமம்தான். அவர்கள் பணி நியமனமும் சட்டத்திற்கு உட்பட்டு வெளிப்படையாக நடைபெற வேண்டும். இவ்வாறு பிரதாபன் ஜெயராமன் கூறினார். இந்த வகுப்பில் திரளானோர் கலந்து கொண்டனர்.