சேலம், ஜூன் 17- சேலம் - அரூர் தேசிய நெடுஞ்சாலை 20 ஆண்டுகளுக்கும் மேலாக அகலப்படுத்தாமல் உள்ள நிலையில், ஒரே விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தை பிறகாவது பணிகள் துவங்கப் படுமா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி யுள்ளனர். சேலம் - அரூர் தேசிய நெடுஞ்சாலையில் வீராணம் அருகே சுக்கம்பட்டி கிராமத்தில் அரசு பள்ளி முன்பு, கடந்த புதனன்று நடந்த கோர விபத்தில் குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து மோதிய இவ்விபத்து மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வாகன போக் குவரத்தை அடிப்படையாகக் கொண்டு சாலை கள், தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்படு வது வழக்கம். அந்த வகையில் சேலம் - அரூர் சாலையானது மாநில நெடுஞ்சாலைத்துறை யில் இருந்து, தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு மாற்றப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாகி றது. இச்சாலையில் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார், பேருந்துகள் மற்றும் கனரக வாக னங்கள் உள்ளிட்ட வாகனங்கள் தினந்தோறும் அதிமாக சென்று வருகின்றன. வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதே தவிர, அவை பாதுகாப்பாக பயணிக்க சாலை விரி வாக்கம் செய்து கொடுக்கப்படவில்லை. குறிப்பாக, வாகனங்கள் ஒன்று கொண்டு முந்தி செல்ல முடியாத வகையில் சாலை குறுக லாக உள்ளது. சாலையில் இருபுறமும் பரந்து விரிந்த பெரிய பெரிய மரங்கள் உள்ளன. அந்த மரங்களில் ஒளி பிரதிபலிப்பான் சில இடங்களில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையில் வாகனங்கள் இடநெரிசலில் செல்வதாலும், அதிவேகமாக செல்வதாலும் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. தற்போது விபத்து நடைபெற்ற பள்ளி முன் புள்ள வேகத்தடையில் வெள்ளை வண்ணம் பூசப்பட்டு, பல ஆண்டுகள் இருக்கும். 24 மணி நேரமும் போக்குவரத்து மிகுந்து காணப்படும் இச்சாலையில் வாகனங்கள் பயணிப்பதற்கான வசதிகளை செய்து கொடுக்க வேண்டிய கடமை நெடுஞ்சாலைத்துறைக்கு உள்ளது. ஒரே விபத்தில் ஐந்து பேரின் உயிர்களை காவு வாங்கிய பிறகாவது, இனியும் தாமதிக்காமல் சேலம் - அரூர் தேசிய நெடுஞ்சாலையை விரி வாக்கம் செய்ய, உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியு றுத்தியுள்ளனர். வெண்ணிலா, முன்னாள் ஊராட்சித் தலைவர் சேலம் - அரூர் சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன. ஆனால், இதுவரை நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. அதனால் தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று வருகின்றன. எனவே, சாலையை விரிவாக்கம் செய்து, விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெங்கடேசன், சிபிஎம் நிர்வாகி இதுகுறித்து அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும், பொதுமக்களை திரட்டி போராட்டங் கள் நடத்தியும் எந்த பலனும் இல்லை. 10 ஆயி ரத்திற்கும் அதிகமான வாகனங்கள் இச்சாலை யில் தினமும் பயணிக்கின்றன. குறிப்பாக, திருவண்ணாமலை ஆரணி போன்ற பகுதி களுக்கு இந்த வழியாகவே அதிக வாகனங்கள் செல்கின்றன. இவ்வழியில் எந்த சுங்கச்சாவடி யும் இல்லாததால் அதிக வாகனங்கள் செல் கிறது. ஆனால் குறுகலான சாலையாக இருப்ப தால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. தற் போது ஐந்து பேர் ஒரே நாளில் இறந்துள்ள சம்பவமும் நடைபெற்றது. தேசிய நெடுஞ்சா லையாக மாற்ற உத்தரவு இருந்தும் இதுவரை எந்த பணியும் மேற்கொள்ளவில்லை. இனியா வது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -எழில் சேலம்