கோவை, மார்ச் 12- சூலூர் காவல் நிலைய வளாகத்தில் மின் கம்பியில் சிக்கி பெண் வவ்வால் ஒன்று உயிரிழந்த நிலையில் தனது குட்டியை விடாமல் இறுக்கிப்பிடித்து காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலையத்தில் உள்ள மரங்களில் அரிய வகை வவ்வால்கள் வசித்து வருகின் றன. இந்த நிலையில் வவ்வால் ஒன்று தனது குட்டியுடன் இரவில் பறந்த போது, எதிர்பாராத விதமாக அங்கிருந்த மின் கம்பியில் சிக்கியது. இதில் மின்சாரம் தாக்கி தாய் வவ்வால் உயிரிழந்த நிலையில் தனது குட்டியை கிழே விடாமல் பிடித் துக் கொண்டு மின்கம்பியிலேயே தொங்கியபடி இருந்தது. உயிரிழந்த நிலையில் மின் கம்பியில் தொங்கிக் கொண்டி ருந்த வவ்வாலின் இறகுகளுக்கு நடுவே குட்டி உயிரோடு இருப்பதை கண்ட போலீசார், உடனடியாக தீயணைப்பு துறை யினருக்கு தகவல் தெரிவித்தனர். அத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து வௌ வாலை மின் கம்பியில் இருந்து இறக்கி குட்டியை தாயிடமி ருந்து தனியாக பிரித்தனர். பின்னர் மதுக்கரை வனத்துறையி னருக்கு தகவல் கொடுத்து வவ்வால் குட்டியை வனப்பகுதி யில் உள்ள மற்ற வவ்வால் இனங்கள் இருக்கும் பகுதியில் கொண்டு சென்று விடுவித்தனர். தான் உயிரிழந்த நிலையிலும் குட்டியை கீழே விடாமல் பாதுகாத்த தாய் வவ்வாலின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.