கோவை, மே 15- பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள், அடுத்து என்ன படிக்கலாம் என்ற வழிகாட்டும் நிகழ்வு வாலிபர், மாணவர் சங்கங்கள் சார்பில் நடைபெற்றது. கோவையை அடுத்த அன்னூர் தாலுகா, பொன்னேகவுண்டன் புதூரில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் “அடுத்து என்ன படிக்கலாம்” என்கிற மாணவர்களுக்குகான வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியில், மாணவர்கள் எந்த கல்லூரியில் தாங்கள் விரும்புகின்ற துறைகளுக்கு எவ்வாறு தேர்வு செய்து குறித்து விளக்கப்பட்டது. மேலும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் விபரங்கள், தொழில்நுட்ப மற்றும் மருத்துவக் கல்லூரி, செவிலியர் பாடப்பிரிவுகளில் எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அர்ஜுன், மாவட்ட பொருளாளர் தினேஷ் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் தீபிகா மற்றும் அன்னூர் தாலுகா குழுவின் தலைவர் பிரதீப் குமார், இந்திய மாணவர் சங்கத்தின் அன்னூர் தாலுகா செயலாளர் ஜெகதீஸ் ஆகியோர் பங்கேற்று மாணவர்களுடைய சந்தேகங்கள் மற்றும் பல்வேறு விவரங்களை எடுத்துரைத்தனர். இந்த நிகழ்ச்சியில் 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.