உடுமலை, பிப்.17 - உடுமலை அருகே சாலை விபத் தில் மக்களைத் தேடி மருத்துவத் திட் டத்தில் பணியாற்றும் ஊழியர் மர ணம் அடைத்தார். அவரது மரணம் குறித்த தகவலை கேள்விப்பட்டு அதிர்ச்சியில் அரசு மருத்துவரும் மர ணம் அடைத்தார். இருவரது அடுத்தடுத்த மரணம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் விபத்து ஏற்படுத்தியவரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி உடுமலை அரசு மருத்துவமணையின் முன் பாக ஞாயிற்றுக்கிழமை சிஐடியு மற் றும் மக்களைத் தேடி மருத்துவ ஊழி யர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள சடையபாளையம் கிரா மத்தைச் சேர்ந்தவர் பிரியா. இவர் செல்லப்பம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களைத் தேடி மருத்துவப் பணியாளராக பணி புரிந்து வந்தார். இந்நிலையில் சடை யபாளையம் கிராமத்தில் முதியவர் ஒருவருக்கு மருந்துகளை வழங்கி விட்டு, அதை படம் பிடித்து ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் உமா ராணிக்கு கட்செவி (வாட்ஸ் ஆப்) மூலம் தகவல் அனுப்பி இருக்கிறார். உடனடியாக அங்கிருந்து கிளம்பி வெளியே வந்த சில நிமிடங்களில், பொள்ளாச்சி சாலையில் அதிவேக மாக வந்த சொகுசுக் கார் பிரியா மீது பலமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த பிரியா சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். பிரியா விபத்தில் சிக்கி உயிரி ழந்த சிறிது நேரத்தில் மருத்துவர் உமாராணிக்கு தகவல் சென்றுள் ளது. இதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர் உமாராணியும் திடீரென உயிரிழந்தார். பிரியாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. மருத்துவ செவிலியர் பிரியாவும், மருத்துவர் உமாராணியும் அடுத்தடுத்து உயி ரிழந்தது இப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் செவிலியர்க ளுக்கு பாதுகாப்பு வழங்கவும், பிரி யாவின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கவும், விபத்து ஏற்படுத்திய காரைக் கண்டுபிடித்து அந்த காரை ஓட்டி வந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி சிஐடியு மற் றும் மக்களைத் தேடி மருத்துவ ஊழி யர் சங்கத்தின் சார்பில் ஞாயிறன்று மாலை உடுமலை அரசு மருத்துவ மனை முன்பாக ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மேலும் உயிரிழப்பு நடந்து 24 மணி நேரமாகியும், சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் யாரும் அங்கு வர வில்லை எனவும் புகார் தெரிவிக்கப் பட்டது. முன்னதாக இந்த ஆர்ப்பாட் டத்திற்கு மக்களை தேடு மருத்துவ ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலை வர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். சிஐடியு திருப்பூர் மாவட் டச் செயலாளர் கே.ரங்கராஜ், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஜெகதீசன், அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அ.பஞ்சலிங் கம் மற்றும் மக்களைத் தேடி மருத் துவ ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.மகாலட்சுமி உள்ளிட்ட திரளானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.