பாலியல் வன்கொடுமை வழக்கு தலைமறைவாக இருந்த நபர் கைது
உதகை, ஜன.7- பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஆந்திராவில் தலைமறைவாக இருந்த முக் கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் குடும்பம், கடந்த 10 வருடங்க ளுக்கு முன்பு வேலை சம்பந்தமமாக நீலகிரி மாவட் டம், உதகைக்கு வந்தனர். இந்த தம்பதியின் மகள் நீல கிரி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த நவ.10 ஆம் தேதியன்று தன்னுடைய தோழிகளை பார்க்க செல்வதாக கூறி விட்டு வெளியில் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவியின் தாயார், தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந் நிலையில், அடுத்த 3 நாட்களில் மாணவி மீண்டும் வீட் டுக்கு வந்து விட்டார். விசாரணையில் முகநூல் மூலம் அறிமுகமான மேட்டுப்பாளையத்தை சேர்ந்த காஜா மெய்தீன், என்பவர் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும், சிறுமியின் குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமையை பயன்படுத்தி பெந்தட்டியை சேர்ந்த பிரேம்குமார் (24) உட்பட 7 பேர் சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்தது தெரியவந்ததால், 7 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட் டது. இதைத்தொடர்ந்து உதகை ஊரக மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பழனியம்மாள் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி 6 பேரை கைது செய்த னர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்த காஜா மொய்தீன் குடும்பத்துடன் ஆந்திர மாநிலத் திற்கு தப்பி சென்றதால், செல்போன் சிக்னல் அடிப்ப டையில் தனிப்படை போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.
எச்எம்பிவி வைரஸ் மனிதர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது!
சேலம், ஜன.7- எச்எம்பிவி வைரஸ் மனிதர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. இதனால் மக் கள் அச்சமடைய வேண்டாம் என அறிவு றுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத் துவமனையில் செவ்வாயன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மருத்துவமனை முதல்வர் தேவி மீனாள் பேசுகையில், எச்எம் பிவி (HMPV) என்பது மனித மெட்டா நியூமோ வைரஸ் எனப்படும் ஒரு வைரஸ் என்பது மக் கள் பீதி அடையும் வகையில் பெரிய அளவை பாதிப்பை ஏற்படுத்தாது. இந்தியாவில் கர்நா டகா மாநிலம், பெங்களூருவில் முதலில் இந்த வைரஸ் நோய் தொற்று பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டில் இருந்து இந்த வைரஸ் பரவி வருகிறது. தற் பொழுது தமிழகத்தில் சென்னை மற்றும் சேலத்தில் தலா ஒருவர் பாதிப்பு அடைந் துள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரி விக்கப்பட்டுள்ளது. இது சுவாச பாதைகளை பாதிக்கும் ஒரு பொதுவான வைரஸ். இந்த வைரஸ் சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திண றல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகி றது. இது பொதுவாக குழந்தைகள் மற்றும் முதியவர்களை அதிகமாக பாதிக்கக்கூடி யது. இந்தியாவில் இந்த வைரஸ் பல ஆண்டு களாக இருந்து வருகிறது. மேலும் இது இன்ஃப்ளூயன்ஸா போன்ற மற்ற சுவாச வைரஸ்களைவிட குறைவான தீவிரம் கொண்டது. ஒரு நேர்முக ஒற்றைக் கட்ட மைப்பு ஆர்என்ஏ வைரசாக இது உள்ளது. பொதுவாக குளிர்காலம் மற்றும் வசந்த காலத்தில் தொடக்கத்தில் பரவும் இந்த வைரஸ், குழந்தைகள் மற்றும் முதியவர்க ளுக்கு சுவாச நோய்களை ஏற்படுத்துகிறது. உடல் மற்றும் தொடர்புடைய சிகிச்சைகள் மருத்துவர்களால் வழங்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முறைகள் முதலில் பாதிக்கப்பட்டவர் மருத்துவ உத விக்கு உட்படுத்தப்பட்டு, அவரின் வேதியி யல் திறனை குறைக்க சிகிச்சை அளிக்கப் படுகிறது. உடல் ஆரோக்கியத்தை வலிமைப் படுத்தும் மருந்துகள் அளித்து வைரஸ் தொற்றை நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது. தடுப்பு மருந்துகள் மருத்துவர்களால் செலுத்தப்படும். எனவே, மக்கள் அச்சம டைய வேண்டாம் எனவும், சுகாதாரமான உணவுகள் மற்றும் குடிநீரை குடிப்பதால் நோய்த்தொற்று நீங்கும். சளி, இருமல் தொடர்ந்து இருப்பவர்கள் அருகாமையில் உள்ள சுகாதார நிலையங்கள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் மருத்துவம னையில் சிகிச்சை பெறலாம். இந்த வைரஸ் குறித்து சுகாதாரத்துறை சார்பில் பொதுமக்க ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரு கிறது, என்றார்.
நூதன முறையில் கொள்ளை: 2 பேர் கைது
தருமபுரி, ஜன.7- தருமபுரி மாவட்டம், காரி மங்கலம் வட்டம், பெரிய மிட்டஅள்ளியைச் சேர்ந்த வர் பெருமா (45). இந்நிலை யில், திங்களன்று காலை இவரது வீட்டிற்கு வந்த 2 பேர், மலிவான விலையில் தங்க நகைகளுக்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறியுள் ளனர். இதன்பின் பெருமாவி டம் குடிக்க தண்ணீர் கேட் டுள்ளனர். அவர் தண்ணீர் கொடுத்தபோது, அடையா ளம் தெரியாத நபர்கள், பெரு மாவின் முகத்தில் மயக்க மருத்தை தெளித்துவிட்டு அவர் அணிந்திருந்த அரைப் பவுன் தங்கத்தோடு, ஒரு கிராம் மூக்குத்தி, வெள்ளிக் கொலுசு ஒரு ஜோடி ஆகிய வற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் விரைந்து செயல்பட்டு, இச் சம்பவத்தில் ஈடுபட்ட திருச்சி மாவட்டம், அரங்கூர் கிராமத் தைச் சேர்ந்த ராஜ் (56), காவேரிப்பட்டணம் பகுதி யைச் சேர்ந்த சின்னசாமி (30) ஆகிய இருவரை கைது செய்து, தங்க நகைகளை மீட்டனர்.
ஹிட்லர், முசோலினியை நினைவூட்டும் மோடி!
கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு விமர்சனம்
கோவை, ஜன.7- தான் நினைத்ததை 140 கோடி மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என மோடி நினைக்கிறார். ஹிட்லர், முசோலினி போல பிரதமர் மோடி நடந்து கொள்கிறார் என கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு விமர் சித்துள்ளார். பல்கலைகழகங்களில் துணை வேந்தர் நியமனத்தில், வேந்தராக உள்ள மாநில ஆளு நர்கள், துணை வேந்தர் தேடுதலை குழுவை நியமிக்க அதிகாரம் வழங்கி பல்கலைகழக மானியக்குழு பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலம் மாநில அரசின் பிரதிநிதிகள் இல்லாமல் குழுவை நியமித்து, துணை வேந் தரை தேர்வு செய்ய முடியும், அதே போல் கல்வி பணி சாராது, வணிகத்துறையை சேர்ந் தவர்கள், பல்கலைக்கழக துணை வேந்தரா கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு கல்வியாளர் கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந் திரபாபு கோவையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், 2014 இல் இருந்து ஜனநாயக அமைப்புகளை நரேந்திர மோடி சிதைத்து வருகிறார். ஜனநாயக பூர்வமான திட்டக் குழுவை கலைத்து விட்டு, நிதி ஆயோக் என்ற அமைப்பை உருவாக்கி சி.இ.ஓ நிர்வகித்தார். திட்டக்குழுவில் தொடங்கி தற்போது பல் கலைக்கழக மானியக்குழு வரையில் ஒவ் வொரு அமைப்பாக சிதைக்கப்பட்டு வரு கிறது. இந்திய அரசியல் அமைப்பு சட்டம் மிக தெளிவாக கூறியுள்ளது. பல்கலைக்கழ கத்தை உருவாக்குதல், நடத்துதல், ஒழுங்கு படுத்துதல், கலைத்தல் ஒன்றிய அரசின் அதி காரத்தில் இல்லை. ஆனால் மாநில பட்டிய லில் இது மாநில அரசின் உரிமை என்று உள் ளது. ஆனால் ஒன்றிய அரசு துணை வேந்தர் நியமனத்தில் பல்கலைகழக மானியக் குழுவை ஈடுபடுத்தி பல்வேறு குளறுபடி களை செய்கிறது. பரிந்துரைகளை கூட கட்டா யம் கடைபிடிக்க வேண்டும் என ஆளுநர்கள் வலியுறுத்துவார்கள். துணை வேந்தரை வணிக நிறுவனத்தில் இருந்து நேரடியாக நிய மிக்கலாம் என கூறியுள்ளனர். பாடம் எடுப்பவர்கள் தான் துணை வேந்த ராக வைக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக சந்தையிடம் கல்வியை கொடுக்கும் வகையி லும், சமூக நீதி அடிப்படையில் எல்லாருக் கும் உயர் கல்வியில் வாய்ப்பை கொடுத்து வரும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களை பின் னுக்கு இழுக்கும் நடவடிக்கையை தான் பல்கலைகழக மானியக்குழு செய்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேச வேண்டும். நாடாளுமன்றத்திலும் தமிழ்நாடு பிரதிநிதிகள் விவாதிக்க வேண் டும். மாநில உரிமைகளை பறிப்பது மட்டு மல்ல, வணிக ரீதியில் செல்ல வகை செய்யும் முடிவு இது. இதனை மக்களும் பேச வேண் டும். மோடி தன் மனதில் தோன்றும் விஷ யத்தை 140 கோடி மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஹிட்லர், முசோலினி போல மோடி நடந்து கொள்கிறார், அதற்காக ஒரு தலைமுறையையே உருவாக்குகிறார், என் றார்.
தார் சாலை அமைக்கக் கோரி சிபிஎம் மனு
திருப்பூர், ஜன.7 - திருப்பூர் எம் எஸ் நகர் செல்வராஜ் நகர் அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதி களில் தார் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி திருப்பூர் இரண்டாவது மண் டல அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர். திருப்பூர் 17 18 மற்றும் 19 ஆவது வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில், குறிப்பாக எம்.எஸ்.நகர் பகுதி செல் வராஜ் நகர் 1, 2 வீதிகளில் தார் சாலை அமைக்கவும், அம்பேத்கர் நகர் பகுதி ஜே.பி.நகர் பகுதியில் குடிநீர், சுகாதார மையம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனை களில் மாநகராட்சி நிர்வாகம் மெத்தன போக்கை கடைப்பிடிப்பதை கண்டித் தும், உடனடியாக அடிப்படை வசதி களை நிறைவேற்றித் தர வலியுறுத்தி யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் எம்.எஸ்.நகர், அம்பேத்கர் நகர் கிளைகளின் சார்பாக இரண்டாம் மண் டல அலுவலகத்தில் செவ்வாய்க் கிழமை மனு கொடுக்கப்பட்டது. இதில் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் பி.ஆர்.கணேசன், மாநக ரக் குழு உறுப்பினர்கள் பொன். பால குமாரன், என்.சண்முகம், தமிழ் வாணன், முன்னாள் மாமன்ற உறுப்பி னர் இ.பி.ஜெயகிருஷ்ணன், மரியா சிசி லியா, கிளைச் செயலாளர்கள் சண்மு கம், ரமேஷ் பாபு மற்றும் பெண்கள் உட் பட பலர் கலந்து கொண்டனர்.
கடனை திருப்பிக்கேட்டு மிரட்டும் தனியார் வங்கி நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
நாமக்கல், ஜன.7- கல்விக்கடனை திருப்பி அடைத் தும், பணம் கட்டச்சொல்லி மிரட்டும் தனியார் வங்கி மற்றும் தனியார் அசட்ஸ் ரீகன்ஸ்ட்ரக்சன் நிறுவனங் கள், ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் அதி ரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு அருகே உள்ள ஆண்டிபாளை யத்தைச் சேர்ந்தவர் அனு பிரசாத் (35). இவர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி யின் திருச்செங்கோடு கிளையில், கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.2,57,000 கல்விக்கடன் பெற் றுள்ளார். அனு பிரசாத் படிப்பை முடித்தவுடன், வேலை கிடைக்காத தால் தந்தையுடன் கூலி வேலை செய்து வந்துள்ளார். இதனால் உரிய காலத்தில் தவணை தொகைகளை செலுத்தவில்லை. கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மனோக ரன், அனுபிரசாத் ஆகியோரிடம் இருந்து கடனை வசூலிக்க இந்தி யன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாகம் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. 2017 ஏப்ரல் மாதத்தில் தந்தையும், மகனும் வங்கிக்கு சென்று கடனை ஒரே தவணையில் முடிக்கும் திட்டத்தின் கீழ் பேச்சு வார்த்தை நடத்தி கடனை செலுத்தி விட்டனர். பணம் செலுத்திய அன்று அவர்களுக்கு கடன் நிலுவையில் இல்லை என்ற சான்றிதழை (NOC) வங்கி வழங்கி உள்ளது. இதன் பின்னரும் வங்கியால் கடனை வசூல் செய்ய தாக்கல் செய் யப்பட்ட வழக்கை வங்கி திரும்பப் பெறவில்லை. இதனால் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அனு பிரசாத்தும், மனோரனும் வங் கிக்கு ரூ.5,16,885 செலுத்த வேண்டும் என்று நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங் கப்பட்டுள்ளது. இந்நிலையில், 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ரிலையன்ஸ் அசட்ஸ் ரீகன்ஸ்ட்ரக்சன் கம்பெனியிலிருந்து பேசுவதாகவும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வாங்கிய கடனுக்கு ரூ.7 லட்சம் செலுத்த வேண்டும் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது. பணத்தைச் செலுத்துமாறு அனு பிர சாத்தின் செல்போனுக்கு தொடர்ந்து குறுஞ்செய்திகள் வந்துள்ளன. இவர் நேரில் சென்று வங்கி மேலா ளரை சந்தித்து கடனை செலுத்திய பின்னர் “ஏன் பணத்தைக் கேட்டு தொல்லை செய்கிறார்கள்” என்று கேட்டதற்கு, அவர் சரிவர பதில் அளிக்கவில்லை. வங்கி தாக்கல் செய்த வழக்கை திரும்பப் பெற வில்லை என்பதும், கடன் ஒப்பந் தத்தை அசட்ஸ் ரீகன்ஸ்ட்ரக்சன் கம் பெனிக்கு வங்கி விற்று விட்டது என் பதும் அனு பிரசாத்துக்கு தெரிய வந் துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த தந்தையும், மகனும் வங்கியின் மீதும், அசட்ஸ் ரீகன்ஸ்ட்ரக்சன் கம்பெனி மீதும் நாமக்கல் மாவட்ட நுகர் வோர் நீதிமன்றத்தில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். நுகர்வோர் நீதிமன்றத் தில் இருந்து விசாரணைக்கு அழைத் தும் வங்கியும், அசட்ஸ் ரீகன்ஸ்ட்ரக் சன் கம்பெனியும் ஆஜராகவில்லை. வழக்கு தாக்கல் செய்தவர்கள் சமர்ப் பித்த ஆவணங்கள் மற்றும் சாட்சி யம் ஆகியவற்றின் அடிப்படையில், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதி மன்ற நீதிபதி வீ.ராமராஜ், உறுப்பி னர்கள் ஆர்.ரமோலா, என்.லட்சு மணன் ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாயன்று தீர்ப்பளித்துள்ளது. அதில், வங்கியின் சேவை குறை பாட்டால் வழக்கு தாக்கல் செய்த வர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ.5 லட்சத்தை நான்கு வார காலத் திற்குள் வங்கி வழங்க வேண்டும். கடன் நிலுவையில் இல்லை என்று சான்று வழங்கிவிட்டு, கடனை வசூ லிக்க ரீகன்ஸ்ட்ரக்சன் கம்பெனிக்கு அதிகாரம் அளித்தது தவறு என்றும், வழக்கு தாக்கல் செய்தவர்களுக்கு நான்கு வாரங்களுக்குள் வங்கி கடி தம் வழங்க வேண்டும். தவறினால் கூடுதல் இழப்பீடாக ஒவ்வொரு நாளும் ரூ.5 ஆயிரத்தை வழக்கு தாக் கல் செய்துள்ளவர்களுக்கு வங்கி செலுத்த வேண்டும். இந்த கல்விக் கடன் கணக்கு தொடர்பான வசூல் நட வடிக்கைகள் எதனையும், வழக்கு தாக்கல் செய்து உள்ளவர்கள் மீது ரீகன்ஸ்ட்ரக்சன் கம்பெனி மேற் கொள்ளக்கூடாது என்றும் இந்த தீர்ப் பில் கூறப்பட்டுள்ளது.