அவிநாசி, ஜூன் 3- அவிநாசி அருகே நிலம் வாங்கித் தருவதாக கூறி 50க்கும் மேற்பட்டவர் களிடம் ரூபாய் 60 லட்சம் அளவுக்கு மோசடி செய்த நபரை போலீஸார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் வெள்ளிரவெளியை சேர்ந்தவர் கிருஷ் ணன் மகன் கதிர்வேல் (40) விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள் ளார். இந்நிலையில் திருப்பூர் நெருப் பெரிச்சல் ஜி.என். கார்டனை சேர்ந்த புவனேந்திரன் என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு காவுத்தாம்பாளையம் அருகே வீட்டுமனை விற்பதாகக் கூறி, கதிர்வேலுக்கு வீட்டுமனையை காட்டி உள்ளார். குறைந்த விலையில் வீட்டுமனை விற்பதாக புவனேந்திரன் சொன்னதால், அதே ஆண்டு அக்.27- ஆம் தேதி, கதிர்வேல் மற்றும் அவரது நண்பர்கள் 6 வீட்டுமனைகளை அவரி டம் பதிவு செய்துள்ளனர். 6 மனைக ளுக்கு ரூ. 6 லட்சத்து 20 ஆயிரம் முன் பணம் தந்துள்ளனர். மேலும், அடுத்த 6 மாதத்தில் முழு கிரையம் செய்து தருவ தாகக் கூறி, புவனேந்திரன் தனித்தனி யாக ஒப்பந்தமும் போட்டுள்ளார். அதன் பிறகு கிரையம் செய்து தரா மல் புவனேந்திரன் காலதாமதம் செய்து உள்ளார். இது தொடர்பாக மனை உள்ள இடங்களில் விசாரித்த போது, புவனேந்திரனுக்கு சொந்த மான மனைகள் அவை இல்லை என்ப தும், பலரிடம் அவர் பணம் பெற்று ஏமாற்றியதும் தெரியவந்தது. ஈரோடு மாவட்டம் பெருந்து றையை சேர்ந்த வேலுமணி மற்றும் செல்வம் என்பவர்களுக்கு சொந்த மான இடம் என்றும் தெரியவந்தது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், குன்னத்தூர் காவல் துறை வழக்கு பதிந்து புவனேந்தி ரனை கைது செய்தனர். மேலும் காவல் துறை விசாரணையில் புவனேந்திரன் தன்னை நிலத்தரகர் என்று சொல்லி பலரிடம் மோசடி செய்துள்ளார். காவுத்தாம்பாளையம், செம்மாண் டாம்பாளையம் ஆகிய இடங்களில் மனையை காண்பித்து, இதுவரை சுமார் 50 பேரிடம் ரூ.60 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டு இருப்பது விசார ணையில் தெரியவந்துள்ளது என காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.