districts

img

தரைப்பாலம் குழிக்குள் சிக்கிய லாரியால் கடும் போக்குவரத்து பாதிப்பு

கோவை, நவ.10- கோவை மாவட்டம், தெலுங்குபாளையம், வாய்க்கால் பாலம் சோதனைச்சாவடி அருகே கோழி தீவனத்தை ஏற்றி கொண்டு வந்த கனரக வாகனம், அப்பகுதியில் கட்டப்பட்டு வரும் தரைப்பால குழியில் இறங்கியது. ஆனால், அதிலி ருந்து மீள முடியாமல் சிக்கியது. காலை நேரத்தில் ஏற்பட்ட இந்த சம்பவத்தினால், அவ்வழியாக பள்ளி மற்றும் கல்லூ ரிக்கு செல்வோர்கள் கடும் பாதிப்படைந்தனர். இதனால் ஏற் பட்ட போக்குவரத்து நெருக்கடியின் காரணமாக 2 கிலோ  மீட்டர் அளவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மேலும், பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பேருந்துகளை விட்டு சாலையில் நடந்து செல்லும் நிலை யும் ஏற்பட்டது. இதற்கிடையே தரைப்பாலம் பணிக்காக மாற் றுப்பாதை ஏற்பாடு செய்யவில்லை. அவ்வாறு செய்திருந் தால் எவ்வித பிரச்சனையுமின்றி பொதுமக்கள் சென்று வர ஏது வாக இருக்கும் என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.